Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3413 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3413திருவாய்மொழி || (7-7—ஏழையர் ஆவி) (எம்பெருமானது பேரழகை உருவெளித் தோற்றத்தில் கண்ட தலைவி வருந்தி உரைத்தல்) (இத்திருவாய்மொழியை ஓதுமவர்கள் எம்பெருமானைப் பிரிந்து வருந்தாதே நித்யஸூரிகளோடே கூடி நித்யாதுபவம் பண்ணப் பெறுவர்களென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11
கட்குஅரிய பிரமன் சிவன் இந்திரன் என்ற இவர்க்கும்
கட்குஅரிய கண்ணனைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
உட்குஉடை ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும் வல்லார்
உட்குஉடை வானவரோடு உட னாய் என்றும் மாயாரே.–7-7-11
கட்கு அரிய,Katku ariya - மனிதா முதலானாருடைய கண்ணுக்க இலக்காகாத
பிரமன் சிவன் இந்திரன் என்ற இவர்க்கு,Piraman sivan indiran endra ivarkku - பிரமன் சிவன் இந்திரன் என்று சொல்லிப் பட்ட இவர்களுடைய
கட்கும் அரிய,Katkum ariya - கண்ணுக்கும் காணவர்யனான
கண்ணனை,Kannanai - எம்பெருமானைக் குறித்து
குருகூர்சட கோபன் சொன்ன,Kurukoor Sadagopan sonna - நம்மாழ்வார் அருளிச்செய்த
உட்கு உடை ஆயிரத்துள்,Udkku udai aayirathul - எம்பெருமானை உள்ளபடி பேசும் வல்லமை வாய்ந்த ஆயிரத்தினுள்ளே
இவையும் ஒரு பத்தும் வல்லார்,Ivaiyum oru pathum vallaar - இப்பத்துப் பாசுரங்களையும் ஓதவல்லவர்கள்
உட்கு உடை வானவரோடு உடன் ஆய் என்றும்,Udkku udai vaanavarodu utan aai endrum - ஆற்றல்மிக்க நித்ய ஸூரிகளோடு கூடியவர்களாய்
மாயார்,Maayaar - ஒரு நாளும் பிரியாதிருக்கப் பெறுவர்கள்