| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3414 | திருவாய்மொழி || (7-8–மாயா வாமன) (எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச்சரியப்படுதல்) (விசித்திரமான காரியங்களையும் காரணங்களையும் எல்லாம் விபூதியாக யுடையனாய் அனுசந்தித்து -இவை என்ன படிகள் என்று விஸ்மிதராய் எம்பெருமானைக் கிடக்கிறார்.) 1 | மாயா! வாமனனே!மது சூதா! நீ அருளாய் தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க் காலாய்த் தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய் நீயாய் நீ நின்றவாறு இவை என்ன நியாயங்களே!–7-8-1 | மாயா,Maayaa - ஆச்சரியமான செய்கைகளையுடையவனே! வாமனனே,Vaamananey - வாமநாவதாரஞ் செய்தவனே! மதுசூதா,Madhusootha - மதுகைடபர்களைத் தொலைத்தவனே! நீ அருளாய்,Nee arulaai - உன்படிகளை நீயே அருளிச் செய்யவேணும்; தீ ஆய் நீர் ஆய் நிலன் ஆய் விசும்பு ஆய்; கால் ஆய்,Thee aai neer aai nilan aai visumbu aai; kaal aai - பஞ்ச பூதங்களுமாய் தாய் ஆய் தந்தை ஆய்,Thaai aai thandhai aai - மாதா பிதாக்களாய் மக்கள் ஆய்,Makkal aai - வயிற்றில் பிறந்த பிள்ளைகளாய் மற்றும் ஆய்,Matrum aai - அல்லாதவையுமாய் முற்றும் ஆய்,Mutrum aai - சொல்லிச் சொல்லாத எல்லாமுமாய் நீ ஆய்,Nee aai - அவதாரணமான தன்மை வாய்ந்த நீயாய் நீ நின்ற ஆறு இவை,Nee ninra aaru ivai - நீ நிற்கிற இந்தச் தன்மைகள் என்ன நியாயங்கள்,Enna niyayangal - என்னவகைகளோ! |