Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3415 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3415திருவாய்மொழி || (7-8–மாயா வாமன) (எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச்சரியப்படுதல்) (கீழ்ப்பாட்டில் ‘நீ நீயாய் நின்றவாறு’ என்று அஸாதாரணமான ஆகாரத்தை அநுஸந்தித்தாரே; அதனை வாய்விட்டுப் பேசி யநுபவிக்கிறார் ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி -சந்த்ர ஸூர்யாதி பதார்த்தங்களை அடைய தனக்கு விபூதியாக யுடையனாய் இருக்கிற படியை அருளிச் செய்கிறார்) 2
அங்கண் மலர்த் தண் துழாய் முடி அச்சுதனே!அருளாய்
திங்களும் ஞாயிறுமாய்ச் செழும் பல் சுட ராய் இருளாய்ப்
பொங்கு பொழி மழையாய்ப் புக ழாய்ப் பழி யாய்ப் பின்னும் நீ
வெங்கண் வெங் கூற்றமுமாம் இவை என்ன விசித்திரமே!-7-8-2
அம் கள் மலர் தண்துழாய் முடி,Am kal malar thandhulai mudi - அழகிய மதுவைக் கொண்ட பூக்களை யுடைத்தான் குளிர்ந்த திருத்துழாய் மாலையை யணிந்த மயிர்முடியையுடைய
அச்சுதனே,Achuthaney - எம்பெருமானே!
அருளாய் நீ,Arulaai nee - அருளிச்செய்யவேணும்;
திங்களும் ஞாயிறும ஆய்,Thingalum nyaayirum aai - சந்திரனும் ஸூர்யனுமாயும்
செழு பல் சுடர் ஆய்,Sezhu pal sudar aai - லிலக்ஷ்ணமாயும் பலவாயுமுள்ள நக்ஷ்த்திரங்களாயும்
இருள் ஆய்,Irul aai - இருளாயும்
பொங்கு பொழி மழை ஆய்,Pongu pozhi mazhai aai - பொங்கிப் பொழியும் மழையாயும்
புகழ் ஆய் பழி ஆய்,Pugazh aai pazhi aai - கீர்த்தியாயும் அபகீர்த்தியாயும்
பின்னும்,Pinnum - இன்னமும்
வெம் கண் வெம் கூற்றமும் ஆய் இவை,Vem kan vem kutramum aai ivai - க்ரூரமான கண்களையும் க்ரூரஸ்வபாவத்தையு முடைய ம்ருத்யுவாயும் நிற்கிற இந்த ப்ரகாரங்கள்
என்ன விசித்திரம்,Enna visithiram - என்ன வேடிக்கை களோ!