| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3416 | திருவாய்மொழி || (7-8–மாயா வாமன) (எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச்சரியப்படுதல்) (கீழ்ப்பாட்டில் வெங்கண் வெங்கூற்றமுமாய் என்றாரே; மண்ணின் பாரம் நீக்குதற்கு வடமதுரையிற் பிறந்த பிறவியிலேயே, மலைபுரைதோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர் குலைய நூற்றுவரும் பட்டழியப் பார்த்தன் சிலைவளையத் திண்தேர்மேல் முன்னின்று அதனை நடத்தின விசித்திரம் நினைவுக்குவர. சித்திரத் தேர்வலவா திருச்சக்கரத்தாய்! என்று விளிக்கிறார்.) 3 | சித்திரத் தேர் வலவா!திருச் சக்கரத் தாய்!அருளாய் எத்தனையோர் உகமும் அவையாய் அவற்றுள் இயலும் ஒத்த ஒண் பல் பொருள்கள் உலப்பில்லனவாய் வியவாய் வித்தகத்தாய் நிற்றி நீ இவை என்ன விடமங்களே!–7-8-3 | சித்திரம்,Siththiram - விசித்திரமாகத் தேரை நடத்த வல்லவனே! தேர் வலவா திரு சக்கரத் தாய்,Ther valavaa thiru sakkarath thaai - திருவாழிப்படையை யடையவனே! அருளாய்,Arulaai - நீயருளிச் செய்ய வேணும்; எத்தனை ஓர் உகமும் அவை ஆய்,Eththanai or ugamum avai aai - க்ருதம் முதலான யுகங்களுக் கெல்லாம் நிர்வாஹனாகய் அவற்றுள் இயலும்,Avatrul iyalum - அந்த காலங்களுக்குள்ளே நடப்பதாய் ஒத்த விய ஒண்பல் உலப்பு இல்லன பொருள் ஆய்,Oththa viya onpal ulappu illana porul aai - ஒருபடியாலே ஒத்தும் மற்றொருபடியாலே வேறுபட்டுமிருக்கிற அழகிய பல எண்ணிறந்த பதார்த்தங்களுமாய் வித்தகத்தால் நீ நிற்றி,Viththagathaal nee nittri - ஆச்சரியப்படத்தக்க தன்மையோடே நீ நிற்கின்றாய்; இவை என்ன விடமங்கள்,Ivai enna vidamanghal - இவை யென்ன சேராச்சேர்த்திகளோ! |