| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3418 | திருவாய்மொழி || (7-8–மாயா வாமன) (எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச்சரியப்படுதல்) (இப்பதிகத்தின் ப்ரமேயத்திற்குத் தலைமையான பாசுரமிது. என்னை ஆதியிலே விசேஷ கடாக்ஷம் பண்ணி வைத்துப் பின்னையும் எனக்குப் பொருந்தாதபடியான ஸம்ஸாரத்திலே வைத்து நடத்திக்கொண்டு போருகிற இவ்வாச்சரிய மிகுந்த படியை எனக்கருளிச் செய்யவேணுமென்கிறார்.) 5 | பாசங்கள் நீக்கி என்னை உனக்கே அறக் கொண்டிட்டு நீ வாச மலர்த் தண் துழாய் முடி மாயவனே!அருளாய் காயமும் சீவனுமாய்க் கழிவாய்ப் பிறப்பாய் பின்னும் நீ மாயங்கள் செய்து வைத்தி;இவை என்ன மயக்குகளே.–7-8-5 | வாசம் மலர் தண்துழாய் முடி மாயவனே,Vaasam malar thandhulai mudi maayavaney - நறுமணம் மிக்க பூவையுடைய செவ்வித்திருத்துழாயை யணிந்த மயிர் முடியையுடைய ஆச்சரியனே!, நீ,Nee - இப்படிப்பட்ட நீ, என்னை பாசங்கள் நீக்கி,Ennai paasangal neekki - எனக்குத் தகாத விஷயஸங்கங்களேக் கழித்து உனக்கே அற கொண்டிட்டு,Unakke arak kondittu - உனக்கே அற்றுத் தீரும்படி அங்கீகரித்து வைத்து காயமும் சீவனும்,Kaayamum seevanum - பந்தமான சரீரமும் பத்த ஜீவனும் கழிவு பிறப்பு ஆய்,Kazhivu pirappu aai - இவற்றுக்கு வரக்கூடிய விநாசமும் உத்பத்தியும் நீயிட்ட வழக்காம்படியாயிருக்க, பின்னும்,Pinnum - பின்னையும் நீ மாயங்கள் செய்து வைத்தி,Nee maayanghal seydhu vaiththi - அவித்யா கர்மவாஸநாருசிகளாகிற வஞ்சனங்களைப பண்ணிவையா நின்றாய்; இவை என்ன மயக்குக்கள்,Ivai enna mayakkukal - இவை என்ன வ்யாமோ ஹகங்களாயிருக்கின்றன! அருளாய்,Arulaai - அருளிச்செய்ய வேணும். |