| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3419 | திருவாய்மொழி || (7-8–மாயா வாமன) (எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச்சரியப்படுதல்) (ஸ்ரீ பன்னீராயிரப்படி –அநந்தரம் ப்ராமக சேஷ்டிதங்களை யுடைய வாமனனான நீ விஸ்ம்ருதியாதி விசித்ரனாய்க் கொண்டு பண்ணுகிற கிலேசங்கள் என்னாய் இருக்கின்றன -என்கிறார்.) 6 | மயக்கா! வாமனனே! மதியாம் வண்ணம் ஒன்றருளாய் அயர்ப்பாய்த் தேற்றமுமாய் அழலாய்க் குளிராய் வியவாய் வியப்பாய் வென்றிகளாய் வினையாய்ப் பயனாய்ப் பின்னுநீ துயக்கா நீ நின்றவாறு இவை என்ன துயரங்களே.–7-8-6 | மயக்கா,Mayakkaa - எப்படிப்பட்டவாகளையும் மதி கெடும்படிபண்ணுமவனே! வாமனனே,Vaamananey - (அந்த சக்தியை) வாமநாவதாரத்தில் காட்டினவனே! மதி ஆம் வண்ணம் ஒன்று அருளாய்,Madhi aam vannam ondru arulaai - எனக்குக் கலக்கந் தீர்ந்து அறிவுண்டாம்படி அருளிச் செய்ய வேணும்; துயர்ப்பு தேற்றமும் ஆய்,Thuyarppu thetramum aai - மறப்பும் தெளிவும் நீயிட்ட வழக்காய் அழல் குளிர் ஆய்,Azhal kulir aai - தாபமும் குளிர்ச்சியும் நீயிட்டவழக்காய் வியவு வியப்பு ஆய்,Viyavu viyappu aai - விஸ்மயநீயமும் விஸ்மயமும் நீயிட்ட வழக்காய் வென்றிகள் ஆய்,Vendrigal aai - (உலகில் விஜய ஸித்திகளும் நீயிட்ட வழக்காய் வினை பயன் ஆய்,Vinai payan aai - புண்ய பாபரூப கருமங்களும் அவற்றின் பலன்களும் நீயிட்ட வழக்காய் பின்னும்,Pinnum - அதுக்குமேலே துயக்கு நீ ஆய,Thuyakku nee aai - இவற்றிலே சேதநர்கலங்குகிற கலக்கமும் நீயிட்டவழக்காய் நீ நின்ற ஆறு இவை,Nee ninra aaru ivai - நீ நிறகிற இந்த ப்ரகாரங்கள் என்ன துயரங்கள்,Enna thuyaranghal - என்ன கஷ்டங்களாயிருக்கின்றன! |