திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3420 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3420திருவாய்மொழி || (7-8–மாயா வாமன) (எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச்சரியப்படுதல்) (இங்கு துயரங்கள் செய்யுங்கண்ணா! என்று எம்பெருமானை விளிக்கின்றார்) 7
துயரங்கள் செய்யும் கண்ணா !சுடர் நீள் முடி யாய்!அருளாய் துயரஞ் செய் மானங்களாய் மதனாகி உகவைகளாய்த் துயரஞ் செய் காமங்களாய்த் துலையாய் நிலையாய் நடையாய்த் துயரங்கள் செய்து வைத்தி;இவை என்ன சுண் டாயங்களே.–7-8-7
பதவுரை Show / Hide
துயரங்கள் செய்யும் கண்ணா!,Thuyaranghal seyyum kanna! - துக்கங்களையுண்டாக்குகிற கண்ணனே!
சுடர் நீள் முடியாய்,Sudar neel mudiyai - ஒளிமிக்கு ஓங்கின திருவபிஷேகத்தை யுடையவனே!
துயரம் செய்,Thuyaram sei - துக்கத்தை விளைக்கிற
மானங்கள் ஆய்,Maanangal aai - பலவகைப்பட்ட துரபிமானங்களாய்
மதன் ஆகி,Madan aagi - செருக்குமாய்
உகவைகள் ஆய்,Ugavaigal aai - ப்ரீதிகளுமாய்
துயரம் செய் காமங்கள் ஆய்,Thuyaram sei kaamangal aai - துக்கங்களை விளைக்கிற காமங்களாய்
துலை ஆய் நிலை ஆய் நடை ஆய்,Thulai aai nilai aai nadai aai - பரிமாணங்களாய் ஸ்தாவர ஜங்கமங்களாய்
துயரங்கள் செய்து வைத்தி,Thuyaranghal seydhu vaiththi - (இப்படி சேதநர்களுக்கு) துக்கங்களைப் பண்ணிவைக்கிறாய்;
இவை என்ன சுண்டாயங்கள்,Ivai enna sundhaayangal - இவை என்ன விளையாட்டுக்களோ!
அருளாய்,Arulaai - அருளிச்செய்யவேணும்.