Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3421 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3421திருவாய்மொழி || (7-8–மாயா வாமன) (எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச்சரியப்படுதல்) (இப்பாட்டின் முதலடியில் பாடபேதம் காண்கிறது; “என்ன சுண்டாயங்களால் எங்ஙனே நின்றிட்டாயென் ” என்பது சில ஆசாரிகளின் பாடம்; “என்ன சுண்டாயங்களால் நின்றிட்டாயென்னையாளுங் ” என்பது சில ஆசாரியர்களின் பாடம். அடுத்த பாசுரத்தின் முதலடியிலும் இது மாறிவரும்.)(என்னையாளுங்கண்ணா! என்ன சுண்டாயங்களால் நின்றிட்டாய்-என்னையடிமை கொள்ளுகிற கண்ணபிரானே! என்ன லீலைகளையுடையையாய் நிற்கிறாய் என்று வியக்கிறார்.) 8
என்ன சுண்டாயங்களால் நின்றிட்டாய் என்னை ஆளுங்கண்ணா!
இன்னதோர் தன்மையை என்று உன்னை யாவர்க்குந் தேற்றரியை
முன்னிய மூவுலகும் மவையாய் அவற்றைப் படைத்தும்
பின்னும் உள்ளாய்!புறத்தாய்!இவை என்ன இயற்கைகளே–7-8-8
ன்னை ஆளும் கண்ணா,,Nnai aalum kanna, - என்னை அடிமை கொள்ளுகிற கண்ணனே!
என்ன சுண்டாயங்களால்,Enna sundhaayangalal - என்ன லீலைகளையுடையையாய் நிற்கிறாய்!
நின்றிட்டாய் இன்னது ஓர் தன்மையை என்று,Ninriṭṭaai innadhu or thanmaiyai endru - இன்னபடிப்ப்ட்டஸ்வ பாவத்தையுடையையாயிரா நின்றாயென்றுஸ
உன்னை யாவர்க்கும் தேற்ற அரியை,Unnai yaavarkkum thetra ariyai - ஓருவர்க்கும் நிர்ணயித்துக்காட்ட முடியாதவனாயிரா நின்றாய்;
முன்னைய மூவுலகும் அவை ஆய்,Munnaiya moovulagamum avai aai - நித்தியமான மூவுலகங்களுக்கும் நிர்வாஹகனாய்
அவற்றை படைத்து,Avatrai padaiththu - அவற்றை ஸ்ருஷ்டித்து
பின்னும்,Pinnum - அதுக்குமேலே
உள் ஆய் புறத்தாய்,Ul aai puraththaa - உளளிலும் வெளியிலும் வியாபித்திருக்கிறவனே!
இவை என்ன இயற்கைகள்,Ivai enna iyarkaihal - இவை என்ன ஸ்பாவங்களாயிருக்கின்றன!,