| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3423 | திருவாய்மொழி || (7-8–மாயா வாமன) (எம்பெருமானது விசித்திர விபூதியைக் கண்டு ஆழ்வார் ஆச்சரியப்படுதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி -வேதைக சமைதி கம்யனாய்-காரணமாய் -அதி ஸூஷ்மமாய் இருந்துள்ள சேதன அசேதனங்களை விபூதியாக உடையவனுடைய இருப்பை அனுசந்திக்கிறார்.) 10 | இல்லை நுணுக்கங்களே இதனி்ற் பிறி தென்னும் வண்ணம் தொல்லை நன்னூலிற் சொன்ன உருவும் அருவும் நீயே அல்லித் துழாய் அலங்கல் அணிமார்ப!என் அச்சுதனே! வல்லதோர் வண்ணம் சொன்னால் அதுவே உனக்காம் வண்ணமே –7-8-10 | இதனில் பிறிது நுணுக்கங்கள் இல்லை என்னும் வண்ணம்,Idanil piridhu nunukkangal illai ennum vannam - இதிற்காட்டில் வேறு நுட்பமில்லை யென்னும்படி தொல்லை நல்நூலில் சொன்ன,Tollai nalnulil sonna - அநாதியான வேதசாஸ்த்ரத்திலே சொல்லப்பட்ட உருவும் அருவும் நீயே,Uruvum aruvum neeye - அசித்தும் சித்தும் நீயே; அல்லி துழாய் அலங்கல் அணி மார்ப என் அச்சுதனே,Alli thulai alangkal ani maarba en achuthaney - பூந்தாரையுடைத்தான திருத்துழாய் மாலை யணிந்த திருமார்பையுடைய என் அச்சுதனே! வல்லது ஒர் வண்ணம் சொன்னால்,Valladhu or vannam sonnaal - கூடுமானவரையில் (யார் எது) சொன்னாலும் உனக்கு அதுவே வண்ணம் ஆம்,Unakku adhuve vannam aam - சொன்னவவ்வளவே உனக்கு வடிவாம் |