Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3425 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3425திருவாய்மொழி || (7-9–என்றைக்கும்) (இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்) (மிகவும் நீசனாயிருக்கிறவென்னை ஞானம் சக்தி முதலியன வுடையேனாம்படி பண்ணி என்னையிட்டுத் திருவாய்மொழி பாடுவித்துக் கொண்ட வுபகாரத்தை நினைக்க நினைக்கத் தரித்திருக்ககில்லேனே! என்கிறார்.) 1
என்றைக்கும் என்னை உய்யக் கொண்டு போகிய
அன்றைக்கு அன்று என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
இன் தமிழ் பாடிய ஈசனை ஆதியாய்
நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ?–7-9-1
என்னை,Ennai - நெடுநாளாக என்பெருமானுடையவிஷயீகாரம் பெறாதிருந்த வடியேனை
என்றைக்கும்,Endraikkum - முதலிலேயே சாச்வதமாக அங்கீகரித்து (அவ்வளவேயன்றிக்கே)
போகிய அன்றைக்கு அன்று,Pogiya andraikku andru - நிகழ்கின்ற நாள்தோறும்
உய்யக் கொண்டு,Uyyaik kondru - விசேஷ கடாஹஷம் பண்ணி
என்னை தன் ஆக்கி,Ennai than aakki - இப்படி விஷயீகரிக்கப் பட்டனென்னைத் தன்னைடொத்தஜ்ஞான சக்திகளுடையேனும்படியாக்கி
என்னால்,Ennaal - என்னை உபகரணமாகக் கொண்டு
தன்னை,Thannai - வேதங்களுக்கு மெட்டாத பெருமை பொலிந்த தன் விஷயமாக
இன் தமிழ் பாடிய,In thamizh paadiya - இனியதமிழ்ப் பிரந்தத்தைப் பாடுவித்துக் கொள்கின்ற
ஈசனே,Eesaney - ஸ்வாமியாய
ஆதி ஆய் நின்றஎன் சோதியை,Aadhi aai ninra en sothiyai - இத்திருவாய்மொழிக்கு மூலகாரணமாயிருந்து எனக்கு வடிவழகைக் காட்டிக்கொடுத்த பெருமானைக் குறித்து
என் சொல்லி நிற்பன்,En solli nirpan - எத்தைச் சொல்லித் தரிப்பேன்!