திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3425 | திருவாய்மொழி || (7-9–என்றைக்கும்) (இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்) (மிகவும் நீசனாயிருக்கிறவென்னை ஞானம் சக்தி முதலியன வுடையேனாம்படி பண்ணி என்னையிட்டுத் திருவாய்மொழி பாடுவித்துக் கொண்ட வுபகாரத்தை நினைக்க நினைக்கத் தரித்திருக்ககில்லேனே! என்கிறார்.) 1 | என்றைக்கும் என்னை உய்யக் கொண்டு போகிய
அன்றைக்கு அன்று என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
இன் தமிழ் பாடிய ஈசனை ஆதியாய்
நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ?–7-9-1 | பதவுரை Show / Hideஎன்னை,Ennai - நெடுநாளாக என்பெருமானுடையவிஷயீகாரம் பெறாதிருந்த வடியேனை என்றைக்கும்,Endraikkum - முதலிலேயே சாச்வதமாக அங்கீகரித்து (அவ்வளவேயன்றிக்கே) போகிய அன்றைக்கு அன்று,Pogiya andraikku andru - நிகழ்கின்ற நாள்தோறும் உய்யக் கொண்டு,Uyyaik kondru - விசேஷ கடாஹஷம் பண்ணி என்னை தன் ஆக்கி,Ennai than aakki - இப்படி விஷயீகரிக்கப் பட்டனென்னைத் தன்னைடொத்தஜ்ஞான சக்திகளுடையேனும்படியாக்கி என்னால்,Ennaal - என்னை உபகரணமாகக் கொண்டு தன்னை,Thannai - வேதங்களுக்கு மெட்டாத பெருமை பொலிந்த தன் விஷயமாக இன் தமிழ் பாடிய,In thamizh paadiya - இனியதமிழ்ப் பிரந்தத்தைப் பாடுவித்துக் கொள்கின்ற ஈசனே,Eesaney - ஸ்வாமியாய ஆதி ஆய் நின்றஎன் சோதியை,Aadhi aai ninra en sothiyai - இத்திருவாய்மொழிக்கு மூலகாரணமாயிருந்து எனக்கு வடிவழகைக் காட்டிக்கொடுத்த பெருமானைக் குறித்து என் சொல்லி நிற்பன்,En solli nirpan - எத்தைச் சொல்லித் தரிப்பேன்! |