Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3426 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3426திருவாய்மொழி || (7-9–என்றைக்கும்) (இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்) (தானே தன்னைக் கவி பாடிவைத்து நான் தன்னைக் கவி பாடினதாக உலகில் ப்ரஸித்தமாக்குவதே! இது என்கொல்! என்று தலைசீய்க்கிறார்.) 2
என் சொல்லி நிற்பன்?என் இன்னுயிர் இன்று ஒன்றாய்
என் சொல்லால் யான் சொன்ன இன்கவி என்பித்துத்
தன் சொல்லால் தான் தன்னைக் கீர்த்தித்த மாயன் என்
முன் சொல்லும் மூவுருவாம் முதல்வனே.–7-9-2
என் இன் உயிர்,En in uyir - என்னுடைய ஹேயமான ஆத்ம வஸ்துவானது
இன்று ஒன்று ஆய்,Indru ondru aai - இன்று தனக்கொரு வஸ்துவாத,
என் சொல்லால் யான் சொன்ன இன் கவி என்பித்து,En sollaal yaan sonna in kavi enpiththu - என்னுடைய சொல்லாலே நான் கர்த்தாவாகச் சொன்ன இனிய பிரபந்த மென்று பிரபந்த மென்று நாட்டிலே பிரஸித்தமாக்கி
தன் சொல்லால்,Than sollaal - தன்னுடைய உக்திகளாலே
தான் தன்னை கீர்த்தித்த,Thaan thannai keerthitha - தானே தன்னைக் கவிபாடிக் கொண்டவனாய்
என் முன் சொல்லும் மாயன்,En mun sollum maayan - எனக்குள்ளேயிருந்து முன்னுருச் சொல்கின்ற ஆச்சர்யபூதனாய்
மூ உரு ஆம் முதல்வன்,Moo uru aam mudhalvan - த்ரிமூர்த்தியாயிருப்பவனான காரணபூதனைக் குறித்துக்
என் சொல்லி நிற்பன்,En solli nirpan - எதைச் சொல்லித் தரிப்பேன்?