Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3428 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3428திருவாய்மொழி || (7-9–என்றைக்கும்) (இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்) (தானே தன்னைக் கவி பாடிக்கொண்டானாகில் ஒர் ஆச்சர்யமில்லை பாடுகைக்குப் பாங்கின்றியே யிருக்கிற வென்னைக் கொண்டு தப்புதலில்லாமல் கவிபாடின இந்த மஹோபகாரத்தை நான் எங்ஙனே மறக்கமுடியுமென்கிறார்.) 4
அப்பனை என்று மறப்பன் என் ஆகியே
தப்புதல் இன்றித் தனைக் கவி தான் சொல்லி
ஒப்பிலாத் தீ வினையேனை உயக்கொண்டு
செப்பமே செய்து திரிகின்ற சீர்கண்டே.–7-9-4
என் ஆகியே,En aagiyae - எனனைக் கொண்டே
தப்புதல் இன்றி,Thapputhal indri - ஒருவகையான அவத்யமும் தட்டாதபடி
தனை தான் கவி சொல்லி,Thanai thaan kavi solli - ஒப்பற்ற பாபியான என்னை
உய்ய கொண்டு,Uyya kondu - உஜ்ஜீவிப்பிக்கத் திருவுள்ளம்பற்றி
செப்பமே செய்து திரிகின்ற,Seppamae seydhu thirikingira - எனக்கு ரக்ஷ்ணமே பண்ணிக்கொண்டு போருகிற
சீர்கண்டு,Seerkandu - சீலத்தைக் கண்டு வைத்து
அப்பனை என்று மறப்பன்,Appanai endru marappan - அப்பெருமானை என்றைக்காவது மறக்க முடியுமோ?