திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3430 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3430திருவாய்மொழி || (7-9–என்றைக்கும்) (இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்) (தனக்குச் சில பாசுரங்கள் வேணுமானால் அவற்றைப் பாடவல்ல மஹாகவிகள் பலருமுண்டே; வ்யாஸபராசரவால்மீகிப்ரப்ருதிகளான மஹர்ஷிகளும் முதலாழ்வார்களுமுண்டாயிருக்க, அவர்களைக்கொண்டு கவி பாடுவித்துக்கொள்ளாதே என்னைக் கருவியாகக்கொண்டு கவி பாடுவதே யென்று தலைசீய்க்கிறார்.) 6
இன் கவி பாடும் பரம கவிகளால் தன் கவி தான் தன்னைப் பாடுவியாது இன்று நன்கு வந்து என்னுடன் ஆக்கி என்னால் தன்னை வன் கவி பாடும் என் வைகுந்த நாதனே.–7-9-6
பதவுரை Show / Hide
என் வைகுந்த நாதன்,En vaikuntha naadhan - பரமபதநாதனை எம்பெருமான்
இன் கவி பாடும் பரம கவிகளால்,In kavi paadum parama kavigalal - மதுரமான கவிகளைப்பாடவல்ல முதலாழ்வார்களைக் கொண்டு
தன் கவி தான் தன்னை பாடுவியாது,Than kavi thaan thannai paaduviyadhu - தனக்குத் தகுதியான பாசுரங்களைத்தான் பாடுவித்துக்கொள்ளாமல்
இன்று நன்கு வந்து என் உடன் ஆக்கி,Indru nanku vandhu en udan aakki - இப்போது எனக்கருள் செய்யவேணுமென்று வந்து என்னைக் கருவியாகக்கொண்டு
என்னுல்,Ennul - என் வாயிலாக
தன்னை வன் கவிபாடும்,Thannai van kavi paadum - தன் விஷயமான சிறந்த பாசுரங்களைப் பாடிக்கொள்கிறன்!.