Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3431 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3431திருவாய்மொழி || (7-9–என்றைக்கும்) (இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்) (என்னைக்கொண்டு பரமபோகயமான கவியைப் பாடுவித்துக்கொண்ட பரமோபகாரத்திற்கு இவனைக் காலமுள்ள தனையும் அநுபவித்தாலும் த்ருப்தி பெறமாட்டேனென்கிறார்.) 7
வைகுந்த நாதன் என் வல்வினை மாய்ந்து அறச்
செய்குந்தன் தன்னை என்னாக்கி என்னால் தன்னை
வைகுந்தனாகப் புகழ் வண் தீங்கவி
செய்குந்தன் தன்னை எந்நாள் சிந்தித்து ஆர்வனோ?–7-9-7
வைகுந்தநாதன்,Vaikunthanadhan - பரமபதநாதனை எம்பெருமான்
என் வல்வினை மாய்ந்து அற,En valvinai maayndhu ara - என்னுடைய பிரபல பாபங்கள் தொலையும்படி செய்பவனாய்
குந்தன்,Kunthan - (அதனால்) பரிசுத்தி பெற்றவனாய்
தன்னை என் ஆன்கி,Thannai en aanki - என்னேடு ஒரு நீராகக்கலந்து
என்னுல் தன்னை வைகுந்தன் ஆக புகழ,Ennul thannai vaikunthan aaga pugazha - என்னைக்கொண்டு தன்னை வைகுண்ட பதியாகப் புகமும்படி
வண் தீம் கவி,Van deem kavi - உதாரமதுரங்களான பாசுரங்களை
செய் குந்தன் தன்னை,Sei kunthan thannai - செய்யும்படியான உபசாரஸ்வபாவமுடைய தன்னை
சிந்தித்து எந்நாள் ஆர்வன்,Sindhiththu ennal aarvan - அநுஸந்தித்து எப்போது த்ருப்தி பிறப்பது?