| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3433 | திருவாய்மொழி || (7-9–என்றைக்கும்) (இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்) (கீழ்ப்பாட்டிற் சொன்னதுதன்னையே இன்னமும் சிறிது சித்திரித்துப் பேசுகிறார்.) 9 | திறத்துக்கே துப்பரவாம் திரு மாலின் சீர் இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ? மறப்பிலா என்னைத் தன் ஆக்கி என்னால் தன்னை உறப்பல இன்கவி சொன்ன உதவிக்கே?–7-9-9 | மறப்பு இலா என்னை,Marappu ilaa ennai - மறப்புக்கு விஷயமில்லாதபடி ஸ்மரணமேயில்லாதிருந்த வென்னை தன் ஆக்கி,Than aakki - தன்னோடொக்க வீஷயீகரித்து என்னால் தன்னை உறபல இன்க சொன்ன உதவிக்கு,Ennala thannai urpala inna sonna uthavikku - என்னைக்கொண்டு தனக்குப் பொருத்தமாகப் பல இனிய பாசுரங்களைப் பாடுவித்த மஹோபகாரத்திற்கு, திறத்துக்கு ஏய் துப்பரவு ஆம் திருமாலின் சீர்,Thiraththukku aai thupparavu aam thirumaalin seer - எந்த விஷயத்திலும் பொருத்தமான ஸாமர்த்தியத்தையுடைய திருமாலின் குணங்களை இறப்பு எதிர் காலம்,Irappu edhir kaalham - இறந்த காலத்தையும் எதிர் காலத்தையும் கூட்டிக்கொண்டு பருகிலும்,Paruginum - அநுபவித்தாலும் ஆர்வனோ,Aarvano - பர்யாப்தி பெறுவேனோ? |