| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3434 | திருவாய்மொழி || (7-9–என்றைக்கும்) (இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்) (அவனுடைய பேருதவிக்கு ஒருபடியாலும் கைம்மாறு இல்லையென்கிறார்.) 10 | உதவிக் கைம்மாறு என் உயிர் என்ன உற்று எண்ணில் அதுவும் மற்று ஆங்கவன் தன்னது என்னால் தன்னைப் பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு எதுவும் ஓன்றும் இல்லை செய்வது இங்கும் அங்கே.–7-9-10 | உதவி கைம்மாறு,Uthavi kaimmaaru - திருவாய்மொழி பாடுவித்துக் கொண்டவுதவிக்குப் பிரதியுபகாரம் என்உயிர் என்னவுற்று எண்ணில்,En uyir ennavuṟṟu eṇṇil - என்னுடைய ஆத்மா என்று சொல்ல நினைத்தால் அதுவும் அவன் தன்னது,Adhuvum avan thannadhu - அவ்வாக்மவஸ்துவும் அவனுடைய பொருளாகவே யிரா நின்றது; என்னால் தன்னை பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு,Ennala thannai padaviy in kavi paadiya appanukku - (ஆனபின்பு) என்னையிட்டுத் தனைனை மதுரமாகப பாடுவித்துக் கொண்ட எம்பிரானுக்கு இங்கும் அங்கும்,Ingum angum - உபயவிபூதியிலும் செய்வது,Seyvathu - செய்யக்கூடிய கைம்மாறு எதுவும் ஒன்றும் இல்லை,Edhuvum ondru illai - மிக அற்பமானதுமில்லை. |