| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3435 | திருவாய்மொழி || (7-9–என்றைக்கும்) (இன்கவி பாடும் பேற்றை எம்பெருமான் தமக்கு அருளியமைக்குக் கைம்மாறு இல்லை எனல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –நிகமத்தில் இத்திருவாய் மொழியை அப்யசித்தார்க்கு எங்கனே சொல்லிலும் ப்ரீதியை விளைக்கும் என்கிறார்.) 11 | இங்கும் அங்கும் திரு மால் அன்றி இன்மை கண்டு அங்ஙனே வண் குரு கூர்ச் சட கோபன் இங்ஙனே சொன்ன ஓர் ஆயிரத்து இப்பத்து எங்ஙனே சொல்லிலும் இன்பம் பயக்குமே.–7-9-11 | இங்கும் அங்கும்,Ingum angum - இவ்விபூதியிலுண்டான ஆச்ரயண வேளையிலும் அவ்விபூதியிலுண்டான கைங்கர்ய தசையிலும் திருமால் அன்றி இன்மை கண்டு,Thirumaal andri inmai kandu - லக்ஷ்மீபதியல்லது வேறெருவர் உர்தேச்யால்லாமையை யறுதியிட்டு அங்ஙனே வண் குரு கூர் சட கோபன்,Anggane van van Kurukoor Sadagopan - அவ்வண்ணமாகவே யிருப்பவரான ஆழ்வார் இங்ஙனே சொன்ன,Anggane sonna - இப்படியருளிச் செய்த ஒர் ஆயிரத்து இப்பத்தும்,Or aayirathu ippaththum - ஆயிரத்துள் இப்பதிகம் எங்ஙனே சொல்லிலும்,Enggane sollilum - எப்படிச் சொன்னாலும் இன்பம் பயக்கும்,Inbam payakkum - ஆனந்தாவஹமாகும். |