| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3436 | திருவாய்மொழி || (7-10—இன்பம் பயக்க) (திருவாறன்விளை சென்று எம்பெருமானைக் கண்டு ஆழ்வார் அடிமைசெய்யக் கருதுதல் (திருவாறன்விளை)) (எம்பெருமான் பிராட்டியோடு கூடு ஆனந்தமயனாக எழுந்தருளியிருக்குமிடமான திருவாறன்விளையிலே அநுபவித்து அடிமை செய்யுங்காலமும் ஆகுமோ வெம்கிறார்.) 1 | இன்பம் பயக்க எழில் மலர் மாதருந் தானும் இவ் வேழுலகை இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆள்கின்ற எங்கள் பிரான் அன்புற் றமர்ந் துறைகின்ற அணி பொழில் சூழ் திரு வாறன்விளை அன்புற் றமர்ந்து வலஞ்செய்து கைதொழும் நாள்களு மாகுங் கொலோ?–7-10-1 | எழில் மலர் மாதரும் தானும்,Ezhil malar maadharum thaanum - அழகிய தாமரைமலரிற் பிறந்த பெரிய பிராட்டியாரும் தானும் இன்பம் பயக்க,Inbam payakka - பரஸ்பரம் ஆனந்தம் மேலிடும் படியாக இனிது உடன் வீற்றிருந்து,Inidhu udan veetrirundhu - இனிமையோடு கூட வெழுந்தருளியிருந்து இ ஏழ் உலகை,I ezh ulagai - இவ்வுலகங்களையெல்லாம் இன்பம் பயக்க ஆள்கின்ற,Inbam payakka aalkindra - இனிமையுற அடிமை கொண்டருளா நிற்கிற எங்கள் பிரான்,Engal piraan - எம்பெருமான் அன்புற்று அமர்ந்து உறைகின்ற,Anputru amarnthu uraignra - மிகவும் திருவுள்ள முகந்து வர்த்திக்கிற அணி பொழில் சூழ்திருவாறன் விளை,Ani pozhil soozhthiruvaaran vilai - அழகிய சோலைகள் சூழ்ந்த திருவாறன் விளைத் திருப்பதியை அன்புற்று அமர்ந்து,Anputru amarnthu - அன்போடு பொருந்தி வலஞ் செய்து,Valanj seydhu - ப்ரதக்ஷிணம் பண்ணி கை தொழும் நாள்களும் ஆகும் கொல்,Kai thozhum naalgalum aakum kol - கை தொழும்படியான நாட்களும் ஸமீபிக்கு மோ? |