| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3437 | திருவாய்மொழி || (7-10—இன்பம் பயக்க) (திருவாறன்விளை சென்று எம்பெருமானைக் கண்டு ஆழ்வார் அடிமைசெய்யக் கருதுதல் (திருவாறன்விளை)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –திருவாறன் விளையில் விலக்ஷண நிரதிசய கந்த யுக்தமான திரு நீரைக் கொண்டு திரு நீர் இட்டு ப்ரதக்ஷிணம் பண்ணி கையாலே தொழவும் கூடவற்றே என்கிறார்.) 2 | ஆகுங்கொல் ஐயம் ஓன்று இன்றி அகலிடம் முற்றவும் ஈரடியே ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறளப்பன் அமர்ந்து உறையும் மாகந் திகழ் கொடி மாடங்கள் நீடு மதிள் திரு வாறன்விளை மாகந்த நீர் கொண்டு தூவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொலோ?–7-10-2 | ஜயம் ஒன்று இன்றி ஆகும் கொல்,Jayam ondrum indri aakum kol - (நமது மநோரதம்) நிஸ்ஸந்தேஹமாக ஸித்திக்குமோ? அகல் இடம் முற்றவும்,Akal idam mutravum - விஸ்தீர்ணமான உலகங்களெல்லாம் ஈர் அடியே ஆகும் பரிசு நிமிர்ந்த,Eer adiye aakum parisum nimirndha - இரண்டடியிலேயே அடங்கும்படி வளர்ந்தருளின திரு குறள் அப்பன்,Thiru kural appan - ஸ்ரீவாமனமூர்த்தி அமர்ந்து உறையும்,Amarnthu uraiyum - விரும்பி வர்த்திக்குமிடமாய், மாகம் திகழ்,Maagam thigazh - பெரிய ஆகாசத்தளவும் ஓங்கி விளங்குகிற கொடி மாடங்கள் நீடு மதிள்,Kodi maadangal needu madil - கொடிகட்டின மாடங்களையும் நெடிய திரு மதிள்களையுமுடைத்தான திருவாறன் விளை மா கந்தம் நீர் கொண்டு தூவி,Thiruvaaran vilai maa kandham neer kondu thoovi - சிறந்த பரிமளம் பொருந்திய தீர்த்தத்தைக்கொண்டு தூவி வலம் செய்து,Valam seydhu - ப்ரதக்ஷிணம் பண்ணி கை தொழ கூடும் கொல்,Kai thozhu koodum kol - அஞ்ஜலிபண்ணி நேருமோ? |