Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3437 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3437திருவாய்மொழி || (7-10—இன்பம் பயக்க) (திருவாறன்விளை சென்று எம்பெருமானைக் கண்டு ஆழ்வார் அடிமைசெய்யக் கருதுதல் (திருவாறன்விளை)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –திருவாறன் விளையில் விலக்ஷண நிரதிசய கந்த யுக்தமான திரு நீரைக் கொண்டு திரு நீர் இட்டு ப்ரதக்ஷிணம் பண்ணி கையாலே தொழவும் கூடவற்றே என்கிறார்.) 2
ஆகுங்கொல் ஐயம் ஓன்று இன்றி அகலிடம் முற்றவும் ஈரடியே
ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறளப்பன் அமர்ந்து உறையும்
மாகந் திகழ் கொடி மாடங்கள் நீடு மதிள் திரு வாறன்விளை
மாகந்த நீர் கொண்டு தூவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொலோ?–7-10-2
ஜயம் ஒன்று இன்றி ஆகும் கொல்,Jayam ondrum indri aakum kol - (நமது மநோரதம்) நிஸ்ஸந்தேஹமாக ஸித்திக்குமோ?
அகல் இடம் முற்றவும்,Akal idam mutravum - விஸ்தீர்ணமான உலகங்களெல்லாம்
ஈர் அடியே ஆகும் பரிசு நிமிர்ந்த,Eer adiye aakum parisum nimirndha - இரண்டடியிலேயே அடங்கும்படி வளர்ந்தருளின
திரு குறள் அப்பன்,Thiru kural appan - ஸ்ரீவாமனமூர்த்தி
அமர்ந்து உறையும்,Amarnthu uraiyum - விரும்பி வர்த்திக்குமிடமாய்,
மாகம் திகழ்,Maagam thigazh - பெரிய ஆகாசத்தளவும் ஓங்கி விளங்குகிற
கொடி மாடங்கள் நீடு மதிள்,Kodi maadangal needu madil - கொடிகட்டின மாடங்களையும் நெடிய திரு மதிள்களையுமுடைத்தான
திருவாறன் விளை மா கந்தம் நீர் கொண்டு தூவி,Thiruvaaran vilai maa kandham neer kondu thoovi - சிறந்த பரிமளம் பொருந்திய தீர்த்தத்தைக்கொண்டு தூவி
வலம் செய்து,Valam seydhu - ப்ரதக்ஷிணம் பண்ணி
கை தொழ கூடும் கொல்,Kai thozhu koodum kol - அஞ்ஜலிபண்ணி நேருமோ?