| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3440 | திருவாய்மொழி || (7-10—இன்பம் பயக்க) (திருவாறன்விளை சென்று எம்பெருமானைக் கண்டு ஆழ்வார் அடிமைசெய்யக் கருதுதல் (திருவாறன்விளை)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –திருவாறன் விளையினுடைய சம்ருத்தமான புகழை பாட நம்முடைய சகல துக்கங்களும் நீங்கும் என்கிறார்.) 5 | மலரடிப் போதுகள் என்நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி வணங்கப் பலரடியார் முன்பு அருளிய பாம்பணை யப்பன் அமர்ந்துறையும் மலரின் மணிநெடு மாடங்கள் நீடு மதிள் திரு வாறன்விளை உலக மலி புகழ் பாடநம் மேல் வினை ஒன்றும் நில்லா கெடுமே.–7-10-5 | மலர் அடி போதுகள்,Malar adi pothugal - பரமபோக்யமான திருவடித்தாமரைகளை என் நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி,En nenjaththu eppozhudhum iruththi - எனது நெஞ்சிலே அநவரதமும் இருக்கும்படி பண்ணி வணங்க,Vananga - தன்னையே வணங்குமாறு; பலர் அடியார் முன்பு அருளிய,Palar adiyaar munbu aruliya - மற்றும் பல பக்தர்கள் இருக்கச்செய்தேயும் அவர்களுக்கு முன்னே எனக்கு க்ருபை பண்ணின பாம்பு அணை அப்பன்,Paambu anai appan - அனந்தசாயியான எம்பெருமான் அமர்ந்து உறையும்,Amarnthu uraiyum - உகந்து வர்த்திக்குமிடமாய் மலாஜீல்,Malaajil - (தேவர்கள் வர்ஷித்த) புஷ்பங்களோடு கூடின மணி நெடுமாடங்கள்,Mani nedumaadangal - மணிமயமான ஓங்கின மாடங்களையும் நீடு மதிள்,Needu madil - நெடிய திருமதிள்களையுமுடைத்தான திருவாறன் விளை,Thiruvaaran vilai - திருவாறம்விளைப்ப தியினுடைய உலகம் மலி புகழ்,Ulagam mali pugazh - உலகமெங்கும் நிறைந்த திவ்ய கீர்த்திகளை பாட,Paada - பாடினவளவிலே நம் மேல் வினை ஒன்றும் நில்லா கெடும்,Nam mel vinai ondrum nillaa kedum - நம்மிடத்துள்ள பாவங்கள் ஒன்றும் மிச்சப்படாதபடி எல்லாம் தொலைந்துபோம். |