Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3442 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3442திருவாய்மொழி || (7-10—இன்பம் பயக்க) (திருவாறன்விளை சென்று எம்பெருமானைக் கண்டு ஆழ்வார் அடிமைசெய்யக் கருதுதல் (திருவாறன்விளை)) (திருவாறன் விளையென்கிற திருப்பதியே தமக்கு ப்ராப்யமென்றும் அங்கு உறையும் எம்பெருமானே அதற்கு உபாயபூதனென்றும் தம்முடைய ஸித்தாந்தத்தை வெளியிடுகிறார் இப்பாட்டில்.) 7
நீணக ரமதுவே மலர்ச் சோலைகள் சூழ் திரு வாறன்விளை
நீணகரத் துறைகின்ற பிரான் நெடுமால் கண்ணன் விண்ணவர்கோன்
வாணபுரம் புக்கு முக் கட்பிரானைத் தொலைய வெம் போர்கள் செய்து
வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்றொன்று இலமே.–7-10-7
மலர் சோலைகள் சூழ்,Malar Solaigal soozh - பூஞ்சோலைகள் சூழ்ந்த
திருவாறன் விளை அதுவே நீள் நகரம்,Thiruvaaran vilai adhuve neel nagaram - திருவாறன் விளையென்கிறதலமே பரமப்ராப்யம்;
நாள் நகரத்து,Naal nagaraththu - (அந்த) மஹாநாகரத்தில்
உறைகின்ற பிரான்,Uraikindra piraan - நித்யவாஸம் பண்ணுகிற மஹோபகாரகனாய்
நெடுமால்,Nedumaal - வியாமோஹமுவீ;யனாய்
கண்ணன்,Kannnan - ஸ்ரீ க்ருஷ்ணனாகத்திருவவதரித்தவனாய்
விண்ணவர் கோன்,Vinnavar koon - நித்யஸீரிகளுக்குத் தலைவனாய்
வாணபுரம் புக்கு,Vaanapuram pukku - பாணாஸுரனுடைய நகரிலே சென்று
முக்கண் பிரான் தொலைய,Mukkan piraan tholaiya - சிலபிரான் பங்கமடையும்படி
வெம் போர்கள் செய்து,Vem poorhal seydhu - கொடிய யுத்தத்தை நடத்தி
வாணனை ஆயிரம் தோள் துணித்தான்,Vaananai aayiram thol thuniththaan - பாணாஸுரனுடைய ஆயிரம் தோள்களையும் துணித்தவான் எம்பெருமான்
சரண்,Saran - (அந்தத் திருப்பதியையடைதற்கு) உபாயபூதன்;
அன்றி மற்று ஒன்று இலம்,Andri matru ondrum ilam - கீழ்ச் சொன்னவை தவிர ப்ராப்ய ப்ராபகங்களே யுடையோ மல்லோம்