| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3442 | திருவாய்மொழி || (7-10—இன்பம் பயக்க) (திருவாறன்விளை சென்று எம்பெருமானைக் கண்டு ஆழ்வார் அடிமைசெய்யக் கருதுதல் (திருவாறன்விளை)) (திருவாறன் விளையென்கிற திருப்பதியே தமக்கு ப்ராப்யமென்றும் அங்கு உறையும் எம்பெருமானே அதற்கு உபாயபூதனென்றும் தம்முடைய ஸித்தாந்தத்தை வெளியிடுகிறார் இப்பாட்டில்.) 7 | நீணக ரமதுவே மலர்ச் சோலைகள் சூழ் திரு வாறன்விளை நீணகரத் துறைகின்ற பிரான் நெடுமால் கண்ணன் விண்ணவர்கோன் வாணபுரம் புக்கு முக் கட்பிரானைத் தொலைய வெம் போர்கள் செய்து வாணனை ஆயிரம் தோள் துணித்தான் சரண் அன்றி மற்றொன்று இலமே.–7-10-7 | மலர் சோலைகள் சூழ்,Malar Solaigal soozh - பூஞ்சோலைகள் சூழ்ந்த திருவாறன் விளை அதுவே நீள் நகரம்,Thiruvaaran vilai adhuve neel nagaram - திருவாறன் விளையென்கிறதலமே பரமப்ராப்யம்; நாள் நகரத்து,Naal nagaraththu - (அந்த) மஹாநாகரத்தில் உறைகின்ற பிரான்,Uraikindra piraan - நித்யவாஸம் பண்ணுகிற மஹோபகாரகனாய் நெடுமால்,Nedumaal - வியாமோஹமுவீ;யனாய் கண்ணன்,Kannnan - ஸ்ரீ க்ருஷ்ணனாகத்திருவவதரித்தவனாய் விண்ணவர் கோன்,Vinnavar koon - நித்யஸீரிகளுக்குத் தலைவனாய் வாணபுரம் புக்கு,Vaanapuram pukku - பாணாஸுரனுடைய நகரிலே சென்று முக்கண் பிரான் தொலைய,Mukkan piraan tholaiya - சிலபிரான் பங்கமடையும்படி வெம் போர்கள் செய்து,Vem poorhal seydhu - கொடிய யுத்தத்தை நடத்தி வாணனை ஆயிரம் தோள் துணித்தான்,Vaananai aayiram thol thuniththaan - பாணாஸுரனுடைய ஆயிரம் தோள்களையும் துணித்தவான் எம்பெருமான் சரண்,Saran - (அந்தத் திருப்பதியையடைதற்கு) உபாயபூதன்; அன்றி மற்று ஒன்று இலம்,Andri matru ondrum ilam - கீழ்ச் சொன்னவை தவிர ப்ராப்ய ப்ராபகங்களே யுடையோ மல்லோம் |