| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3444 | திருவாய்மொழி || (7-10—இன்பம் பயக்க) (திருவாறன்விளை சென்று எம்பெருமானைக் கண்டு ஆழ்வார் அடிமைசெய்யக் கருதுதல் (திருவாறன்விளை)) (திரு வாறன் விளையை யநுபவிக்க ப்ரதப்தமாகும்போது ஸ்ரீ வைகுண்டம் கிடைப்பதானைலும் தம்முடைய திருவுள்ளம் அதனைப் பொருள்படுத்தாகென்று கூறும் முகத்தால் இத்திருப்பதியில் தமக்குள்ள ஆதராதிசயத்தை வெளியிட்டருளுகிறார்.) 9 | தீ வினை உள்ளத்தின் சார்வல்லவாகித் தெளி விசும்பு ஏறலுற்றால் நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்று யாவரும் வந்து வணங்கும் பொழில் திரு வாறன் விளையதனை மேவி வலஞ்செய்து கைதொழக் கூடுங்கொல்?’ என்னுமென் சிந்தனையே.–7-10-9 | தீ வினை உள்ளத்தின் சார்வு அல்ல ஆகி,Thee vinai ullaththin saarvu alla aagi - பாவங்கள் நெஞ்சில் சேர்த்தியற்று ஜஹருதயம் நிர்த்தோஷமாகிஸ தெளி விசும்பு ஏறல் உற்றல்,Thel viumbhu eeral utrthal - திருநாட்டிலே போக ப்ராப்தமானலும் (அங்குச் செல்ல விருப்பமற்று) என் சிந்தனை,En sindhanai - எனது நெஞ்சானது. நாவினுள்ளும் உள்ளத்துள்ளும் அமைந்த தொழிலினுள்ளும் நவின்று யாவரும் வந்து வணங்கும்,Naavinullum ullaththullum amaindha thozhilinullum navindru yaavarum vandhu vanangum - மநோ வாக்காயங்களினாலே பயின்று யாவரும் வந்து வணங்குமிடமான பொழில் திருவாறன் விளையதனை,Pozhil thiruvaaran vilaiyadhanai - பொழில் திருவாறன் விளையதனை மேலி வலம் செய்து கைதொழ கூடும் கொல் என்னும்,Maeli valam seydhu kaithozhu koodum kol ennum - பொருந்தி வலஞ்செய்து கைதொழ ப்ராப்த மாகுமோ! என்று இதனையே யெண்ணை நின்றது. |