Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3445 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3445திருவாய்மொழி || (7-10—இன்பம் பயக்க) (திருவாறன்விளை சென்று எம்பெருமானைக் கண்டு ஆழ்வார் அடிமைசெய்யக் கருதுதல் (திருவாறன்விளை)) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –திருவாறன் விளையை பிராப்யம் என்று இருக்க -அவன் திரு நாட்டைத் தரிலோ என்ன அவன் சர்வஞ்ஞான் அல்லனோ அறியானோ என்கிறார்.) 10
சிந்தை மற்று ஒன்றின் திறத்தது அல்லாத்தன்மை தேவபிரான் அறியும்
சிந்தையினால் செய்வதா னறியாதன மாயங்கள் ஒன்றும் இல்லை
சிந்தையினால் சொல்லினால் செய்கையால் நிலத் தேவர் குழு வணங்கும்
சிந்தை மகிழ் திரு வாறன் விளையுறை தீர்த்தனுக்கு அற்ற பின்னே.–7-10-10
சிந்தையினால் சொல்லினால் செய்கையால்,Sindhaiynaal sollinaal seykaiyaal - மனோவாக்காயங்களாலே
நிலத்தேவர் குழு வணங்கும்,Nilaththaevar kuzhu vanangum - பாகவத கோஷ்டி வணங்கப்பெற்ற
சிந்தை மகிழ்திருவாறன் விளை உறை,Sindhai makizthiruvaaran vilai urai - மகோஹரமான திருவாறன் விளையிலே வாழ்கிற
தீர்த்தனுக்கு அற்றபின்,Theerththanukku attrapin - பரமபவித்தரனான பெருமானுக்கு அற்றுத்தீர்ந்த பின்
சிந்தை மற்று ஒன்றின் திறத்தது அலலா தன்மை,Sindhai matru ondrin thiraththathu allaa thanmai - எனது மனம் வேறெனறை உத்தேச்யமாக நினைத்திராத படியை
தேவபிரான் அறியும்,Deva piraan ariyum - ஸர்வஜ்ஞனான எம்பெருமான தானே அறியக்கடவன்;
சிந்தையினால் செய்வ,Sindhaiynaal seiva - நெஞ்சால் செய்யப்படுமவற்றில்
தான் அறியா தன மாயங்கள் ஒன்றும் இல்லை,Thaan ariya thana maayanghal ondrum illai - அவன் தானறியாத வஞ்சனாங்களொன்றுமில்லையே.