Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3446 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3446திருவாய்மொழி || (7-10—இன்பம் பயக்க) (திருவாறன்விளை சென்று எம்பெருமானைக் கண்டு ஆழ்வார் அடிமைசெய்யக் கருதுதல் (திருவாறன்விளை)) (இத்திருவாய்மொழியை ஒதுமவர்கள் நித்யஸூரிகள் போரவும் கௌரவிப்பர்களென்று அதனையே பலனாகக் கூறித் தலைக் கட்டுகிறார்.) 11
தீர்த்தனுக்கு அற்ற பின் மற்று ஓர் சரணில்லை என்று எண்ணித் தீர்த்தனுக்கே
தீர்த்த மனத்தனனாகிச் செழுங் குரு கூர்ச்சட கோபன் சொன்ன
தீர்த்தங்கள் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார்களைத் தேவர் வைகல்
தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி யுரைப்பர் தம் தேவியர்க்கே.–7-10-11
தீர்த்தனுக்கு அற்றபின்,Theerththanukku attrapin - பரமபவித்திரனான எம்பெருமானுக்கு அநந்யார் ஹப்பட்டபின்பு
மற்று ஒர் சரண இல்லை என்று எண்ணி,Matru or saran illai endru enni - வேறொரு உபாயமில்லை யென்று அறுதியிட்டு
தீர்த்தனுக்கே தீர்த்த மனத்தனன் ஆகி,TheerththanukkE theertha manadhthanan aagi - அப்பெருமானுக்கே அறுதியாக்கப்பட்ட நெஞ்சையுடையவராய்க் கொண்டு
செழு குருகூர் சடகோபன் சொன்ன;,Sezhu kurukoor Sadagopan sonna; - செழு குருகூர் சடகோபன் சொன்ன;
தீர்த்தகங்கள் ஆயிரத்துள்,Theerththakangal aayiraththul - ஆயிரம் பாட்டும் ஆயிரம் தீர்த்தங்களென்னும் படியாக வுள்ளத்திலே
இவை பத்தும் வல்லார்களை,Ivai pathum vallaargalai - இப்பதிகத்தை ஓத வல்லவர்களைப் பற்றி
தேவர்,Devar - நித்யஸூரிகள்
வைகல்,Vaikal - எப்போதும்
தம் தேவியர்க்கு,Tham deviyarkku - தங்கள் மஹிஷிகளிடத்திலே
தீர்த்தங்களே,Theerththangalai - ‘இவர்கள் பரமபவித்தரங்களே’ என்று ஸபஹூமானமாகச் சொல்லுவர்கள்.