| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3447 | திருவாய்மொழி || (8-1–தேவிமாராவார்) (எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும் தானாகும் நிலையையும் ஆழ்வார் சங்கித்துத் தெளிதல்) (பிரிவில் தரித்திருக்க வொண்ணாதபடி பரம போக்யதை வாய்ந்திருக்கிற நீ உன்னை நான் காணும்படி. அருள்புரியவேணு மென்கிறார். இப்பாட்டில்.) 1 | தேவிமார் ஆவார் திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட் செய்வார் மேவிய வுலகம் மூன்றவை யாட்சி வேண்டு வேண்டுருவம் நின்னுருவம் பாவியேன் தன்னை யடுகின்ற கமலக் கண்ணது ஓர் பவளவாய் மணியே ஆவியே அமுதே அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாயே–8-1-1 | தேவிமார் ஆவார்,Devimar avaar - (உன் அழகுக்கும் பெருமைக்கும் தகுதியான) தேவிகளாயிருப்பவர்கள் (யாவரென்னில்) திரு மான் பூமி மற்று,Tiru man bhoomi matru - ஸ்ரீதேவியும் பூதேவியுமாவர் அதற்கு மேலே ஏவ ஆட்சிசெய்வார்,Eva atchiseivar - (நீ அந்த திவ்ய மஹிஷிதனோடுகூட) ஆஜ்ஞாபிக்க (அக்கட்டளையின்படி) அடிமைசெய்பவர்கள் யாரென்னில்) அமரர்,Amarar - நித்யஸூரிகள் ஆட்சி,Atchi - உனது ஆளுகைக்கு உட்பட்ட பொருளோவென்னில் மேவிய ன்று உலகம் அவை,Meviya ntru ulagam avai - பொருந்திய மூவுலகங்களுமாம் நின் உருவம்,Nin uruvam - உனக்கு அஸாதாரணரூபங்களோ வென்னில், வேண்டு வேண்டு உருவம்,Vendu vendu uruvam - இஷ்டப்படி பரிக்ரஹிக்கிற திவ்ய வுருவங்களாம் (இப்படிகளை அடியேனுக்குக் காட்டிக்கொடுத்த வளவேயன்றிக்கே) பாவியேன்தன்னை அடுகின்ற,Paviyen thanai adugindra - பாவியான என்னை முடிக்க வந்தது போன்றிருக்கின்ற கமலம் கண்ணது,Kamalam kannathu - செந்தாமரை கண்களும் ஓர் பவளம் வாய்,OrPavalam vai - ஒப்பற்ற பவளம் போன்ற அதர சோபையுமுடைய மணியே,Maniye - பரஞ்சோதியானவனே! அமுதே,Amuthe - ஆராவமுதமே! அலை கடல் கடைந்த அப்பனே,Alai kadal kadainda appane - அலையெறிகின்ற கடலைக் கடைந்த அமுதமளித்தபிரானே! காணும் ஆறு அருளாய்,Kaanum aaru arulai - (உன்னை நான்) கண்ணாரக்காணும் வகை அருளவேணும். |