Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3448 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3448திருவாய்மொழி || (8-1–தேவிமாராவார்) (எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும் தானாகும் நிலையையும் ஆழ்வார் சங்கித்துத் தெளிதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –என்றும் காண வேணும் என்று மிகவும் நோவு பட்டு இருக்கும் இருப்போ-என் திறத்து செய்து அருள பார்த்திற்று -ஐயோ இங்கனம் படாமே உன்னைக் காணும் படி கிருபை பண்ணி அருள வேணும் என்கிறார்.) 2
காணுமாறு அருளாய் என்று என்றே கலங்கிக் கண்ண நீர் அலமர வினையேன்
பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ
காணுமாறு அருளாய் காகுத்தா !கண்ணா !தொண்டனேன் கற்பகக் கனியே !
பேணுவாரமுதே !பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா !–8-1-2
காணும் ஆறு அருளாய் என்று என்றே,Kaanum aaru arulai endru endre - (உன்னை நான்) காணும் வகை செய்தருளவேணுமென்று பலகாலும் சொல்லிக்கொண்டே
கலங்கி,Kalangi - (ஆசைப்பட்டபடி காணப்பெறாமையாலே) கலக்கங்கொண்டு
கண்ண நீர் அலமா,Kanna neer alamaa - கண்ணீர் பரவாநிற்க,
வினையேன்,Vinaiyen - (காணப்பெறாத) பாவத்தை யுடையேனான நான்
பேணும் ஆறு எல்லாம் பேணி,Penum aaru ellam peni - (தூதுவிடுகை மடலெடுக்கை முதலாக) எதுஎது செய்யலாமென்று நினைத்தேனோ அதுவெல்லாம் செய்தும் (கிடையாமையாலே)
நின் பெயரே பிதற்றும் ஆறு எனக்கு அருள்,Nin peyare pitharrum aaru enakku arul - உனது திருநாமங்களையே பிதற்றிக்கொண்டிருக்கம்படியான விதுலேயன்றோ எனக்கு நீ செய்து கொடுத்தவருள்
அந்தோ,Antho - ஐயோ! (இவ்வளவேயோ நான் பெற்ற பாக்கியம்!)
காகுத்தர்,Kaaguthar - இராமனாய்த் தோன்றி எளியனானவனே!
தொண்டனேன் கற்பகம் கனியே,Thondanen karpagam kaniye - அடியேனக்குக் கல்பவ்ருக்ஷ பலனாகத்தோன்றியிருப்பவனே!
பேணுவார் அமுதே,Penuvar amuthe - ஆசைப்பட்டவர்களுக்கு அமுதம் போன்றவனே!
பெரிய தண் புனல் சூழ் பெரு நிலம் எடுத்த பேராளா,Periya than punal soozh peru nilam eduttha peralaa - விசாலமாய்க் குளிர்ந்த பிரளய வெள்ளத்திலே யழுந்தின மஹாபூமியை உயரவெடுத்த மஹாநுபாவனே!
காணும் ஆறு அருளாய்,Kaanum aaru arulai - (உன்னைநான்) காணும்படி க்ருபை பண்ணவேணும்.