திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3449 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3449திருவாய்மொழி || (8-1–தேவிமாராவார்) (எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும் தானாகும் நிலையையும் ஆழ்வார் சங்கித்துத் தெளிதல்) (அடியவர்க்கு எளியவனென்று பேர்பெற்றிருக்கிற நீ இன்றுவந்து உதவாதொழியில் நீ ஆச்ரித ரக்ஷகனென்னுமிடத்தை உன்னடியார்கள் எப்படி நம்பமுடியுமென்கிறார். இப்பாசுரத்திற்கு உயிரானது.) 3
எடுத்த பேராளன் நந்தகோபன் தன் இன்னுயிர்ச் சிறுவனே ! அசோதைக்கு அடுத்த பேரின்பக் குல விளங்களிறே ! அடியனேன் பெரிய வம்மானே ! கடுத்த போர் அவுணன் உடல் இரு பிளவாக் கை யுகிராண்ட எம் கடலே ! அடுத்த தோர் உருவாய் இன்று நீ வாராய் எங்கனம் தேறுவரும் உமரே ?–8-1-3
பதவுரை Show / Hide
எடுத்த பேராளன்,Edutha peralan - நிதி யெடுத்த மஹாநுபாவனென்று கொண்டாடப்படுகிற
நந்தகோபன் தன்,Nandakopan than - நந்தகோபனுடைய
இன் உயிர் சிறுவனே,In uyir siruvane - இனிமையான உயிர்போன்ற திருக்குமாரனே!
அசோதைக்கு அடுத்த பேர் இன்பம்,Asothaikku adutha per inbam - (தேவதிப்பிராட்டி வயிறெறிந்து கிடக்க) யசோதைப்பிராட்டியிடம் வந்து சேர்ந்த அளவிறந்த ஆனந்தவடிவனாகி.
குலம் இளங் களிறே,Kulam ilang kalire - அக்குலத்திற்கு யானைக்குட்டி போன்றவனே!
அடியனேன் பெரிய அம்மானே,Adiyanen periya ammanae - அடியேனுக்கு உன் பெருமைகளெல்லாம் காட்டின பிரானே!
கடுத்த போர் அவுணன் உடல்,Kadutha por avunan udal - போர்புரிவதில் தினவு விஞ்சின இரணீயாசுரனுடைய உடலை
இரு பிளவு ஆ,Iru pilavu aa - இரு துண்டமாகும்படி
கை உகிர் ஆண்ட,Kai ukir aanda - திருக்கையிலுள்ள நகங்களைக் கொண்டு காரியஞ்செய்த
எம் கடலே,Em kadalae - எம்போல்வார்க்குக் கடல் போன்றவனே!
இன்று,Inru - நான் விரும்புமிக்காலத்ல்
அடுத்தது ஓர் உரு ஆய்,Aduthathu or uru aai - தகுதியான வொரு உருவைக் கொண்டவனாகி
நீ வாராய்,Nee varai - நீ வருகின்றிலையே! (இப்படி நீ உபேக்ஷித் திருந்தாயாகில்)
உமர்,Umar - என்போன்றவர்களான (உம்மைச்சேர்ந்த) பக்தர்கன்
எங்ஙனம் தேறுவர்,Engnanam theruvar - (உன்னை ஸர்வரக்ஷகனென்று) எப்படி நம்புவர்கள்?