Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3451 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3451திருவாய்மொழி || (8-1–தேவிமாராவார்) (எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும் தானாகும் நிலையையும் ஆழ்வார் சங்கித்துத் தெளிதல்) (ஆழ்வீர்! பேறுபெறுமவர் நீரான பின்பு அதற்குரிய ஸாதநானுஷ்டானமும் உம்முடைய தலையிலேயாக வேண்டாவோ? அஃது ஒன்றுமின்றிக்கே “அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்“ என்றால் இதுவொரு வார்த்தையோவென்று எம்பெருமான் திருவுள்ளமாக, நானொரு ஸாதநானுஷ்டானம் பண்ணிவந்து காண்பதென்று ஒன்றுண்டோ வென்கிறாரிதில்.) 5
ஆருயிரேயோ ! அகலிடமுழுதும் படைத்திடந்துண்டு மிழ்ந்த ளந்த
பேருயிரேயோ ! பெரிய நீர் படைத்து அங்குறைந்தது கடைந்தடைத்துடைத்த
சீருயிரேயோ !மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ !
ஒருயிரேயோ ! உலகங்கட் கெல்லாம் உன்னை நான் எங்கு வந்துறுகோ ?–8-1-5
ஆர் உயிரே ஓ,Aar uyirae oh - அருமையான உயிராயிருப்பவனே!
அகல் இடம் முழுதும் படைத்து,Agal idam muzhudhum padaiththu - விசாலமான உலகம் முழுவதையும் ஸ்ருஷ்டித்து
இடந்து,Idandhu - (ஒருகால்) பிரளயாரணவத்தில் மங்கிப்போகாதபடி இடந்தெடுத்து
உண்டு,Undu - (ஒருகால்) திருவயிற்றிலே வைத்து நோக்கி
உமிழ்ந்து,Umizhndhu - பிறகு வெளிப்படுத்தி
அளந்த,Alandha - (ஒருகால்) மாவலிபக்கல் நீரேற்று அளந்துகொண்ட
பேர் உயிரே ஓ,Per uyirae oh - ஸர்வஸ்மாத் பரனே!
பெரிய நீர் படைத்து,Periya neer padaiththu - மஹாஜலமான ஏகார்ணவத்தை ஸ்ருஷ்டித்து
அங்கு உறைந்து,Angu uraindhu - அங்கே கண்வளர்ந்தருளி
அது கடைந்து,Adhu kadaindhu - அதுபோன்ற வொரு பாற்கடலைக் கடைந்து
(அது) அடைத்து உடைத்த,Adhu adaiththu udaiththa - அதுபோன்ற மற்றொரு கடலிலே ஸேதுபந்தம் பண்ணி தநுஷ்கோடியாலே அதனையுடைத்த
சீரியரே ஓ,Seeriyarae oh - பரபரனே!
மனிசர்க்கு தேவர் போல தேவர்க்கும் தேவா ஓ,Manisarkku thevar pola thevarkkum thevaa o - மனிசர்கும் தேவர்க்கும் எவ்வளவவாசியோ அவ்வளவவாசி தேவர்க்கும் உனக்கும் போரும்படியாகவுள்ளவனே!
உலகங்கட்டு எல்லாம் ஓர் உயிரே ஓ,Ulagangattu ellam or uyirae oh - எல்லா வுலகங்களுக்கும் ஓர் உயிராயிருப்பவனே!
நான் உன்னை எங்க வந்து உறுகோ,Naan unnai engka vandhu urugoo - அடியேன் உன்னை எங்கு வந்து கிட்டப்பெறுவேன்?