Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3452 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3452திருவாய்மொழி || (8-1–தேவிமாராவார்) (எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும் தானாகும் நிலையையும் ஆழ்வார் சங்கித்துத் தெளிதல்) (கீழில் பாட்டில் சொன்ன பொருளை விஸ்தரிக்கிறார்.) 6
எங்கு வந்துறுகோ !என்னை யாள்வானே ! ஏழு லகங்களும் நீயே
அங்கவர்க்கமைத்த தெய்வமும் நீயே அவற்றவை கருமமும் நீயே
பொங்கிய புறம் பாற் பொருளுளவேலும் அவையுமோ நீ யின்னே யானால்
மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே வான் புலன் இறந்ததும் நீயே–8-1-6
என்னை ஆள்வானே,Ennai aalvaane - (இதுவரையில்) என்னை நிர்வஹித்துக்கொண்டு போருமவனே!
எழ் உலகங்களும் நீயே,Ezh ulagangalum neeye - ஸப்தலோகங்களும் நீயிட்ட வழக்கு,
அங்கு,Angu - அந்த லோகங்களில்
அவர்க்கு அமைந்த,Avarkku amaindha - (பலன்களைக் கோருகின்ற) அவரவர்களுக்கு ஆராதிக்கும்படி ஏற்படத்தின
தெய்வமும்,Dheyvamum - தைவங்களும்
நீயே,Niyae - உன் அவயபூதங்கள்
அவற்றவை கரும்மும் நீயே,Avatravai karummum niyae - அத்தெய்வங்களைக் குறித்து ஆராதனையாகப் பண்ணும் காரியங்களும் நீயிட்ட வழக்கு.
பொங்கிய புறம்பால் பொருள் உள ஏலும்,Pongiya purambaal porul ula elum - இவ்வுலகங்களிற் காட்டிலும் விஞ்சிப் புறம்பட்ட பொருள்கள் எவ்வனவிருந்தாலும் அவ்வளவும்
அவையும் நீ,Avaiyum ni - அவையும் நீயிட்டவழக்கு
மங்கிய அரு ஆம் நேர்ப்பமும் நீயே,Mangiya aru aam naerppamum niyae - காரணாவஸ்தையில் சுருங்கிக் கிடக்கிறஸூக்ஷ்மசிதசித் வஸ்துக்களும் நீயிட்ட வழக்கு
வான் புலன் இறந்ததும் நீயே,Vaan pulan irandhadum niyae - அவ்யக்தத்தையும் வியாபிக்கக்கூடியதாய் கண்முதலிய இந்திரியங்களுக்குப் புலப்படுத்தன்மையற்ற தான ஜீவஸமஷ்டியும் நீ யிட்ட வழக்கு.
இன்னே ஆனால்,Innae anaala - இப்படியாமளவில், (உன்னை நான் எங்குவந்து உறுகோ? என்று கீழ்ப்பாட்டோடே அந்வயம்)