Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3453 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3453திருவாய்மொழி || (8-1–தேவிமாராவார்) (எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும் தானாகும் நிலையையும் ஆழ்வார் சங்கித்துத் தெளிதல்) (எல்லா பொருள்களும் உனக்கு வடிவாய்க்கொண்டு சேஷமாய் நீயே அவற்றுக்கு ப்ரகாரியாய் – சேஷியாயிருக்கிறாயென்கிற அறிவு ஒன்று கொண்டு தரித்திருக்கிற நான் என்பாபத்தாலே அதிலும் அதிசங்கைபண்ண நேர்ந்துவிட்டதேயென்று நோகிறார்.) 7
இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே நிகழ்வதோ நீ யின்னே யானால்
சிறந்த நின் தன்மை யது விது வுது வென்று அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்
கறந்த பால் நெய்யே ! நெய்யின் சுவையே ! கடலினுளமுதமே !அமுதிற்
பிறந்த இன் சுவையே ! சுவையது பயனே பின்னை தோள் மணந்த பேராயா !–8-1-7
கறந்த பால்,Karandha paal - அப்போது கறந்தபால் போல் இனியனானவனே!
நெய்யே,Neiyae - அதில் ஸாரமான நெய் போன்றவனே!
நெய்யின் இன் சுவையே,Neyin in suviyae - நெய்யின் இனிமையான சுவைதானே வடிவெடுத்ததுபோன்றவனெ!
கடலினுள் அமுதமே,Kadalinul amudhamae - கடலில் தோன்றிய அமுதம் போன்றவனே!
அமுதில் பிறந்த இன் சுவையே,Amudhil pirandha in suviyae - அமுதிலுள்ள இனிமையான சுவைதானே வெடுத்தவனே!
சுவை அது பயனே,Suvai adhu payanae - அவ்வினிமையினுலுண்டாகும் ஆனந்தமே!
பின்னை தோள் மணந்த பேர் ஆயா,Pinnai thol manandha per aayaa - நப்பின்னைப்பிராட்டியை மணம்புணர்ந்து கோபால க்ருஷ்ணனே!
இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே நிகழ்வதோ நீ,Irandhadum niyae edhindhadum niyae nigazhvadho ni - முக்காலங்களிலுமுள்ள பொருள்களும்ந யிட்ட வழக்கு
இன்னே ஆனால்,Innae anaal - இப்படியான பின்பு
அது இது உது,Adhu idhu udhu - தூரஸ்தமாயும் ஸமீபஸ்தமாயும் மத்யஸ தமாயுமுள்ள ஸகல பரார்த்தங்களும்
சிறந்த நின் தன்மை,Sirandha nin thanmai - பரபரனான உன்னுடைய ஸவபாவங்கள்
என்ற அறிவு ஒன்றும்,Enra arivu ondrum - என்கிற இவ்வறிவு தன்னிலும்
வினையேன் சங்கிப்பன்,Vinaiyen sangippan - பாவியேன் அதிசங்கை கொள்பவனாயிரா நின்றேன்.