Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3456 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3456திருவாய்மொழி || (8-1–தேவிமாராவார்) (எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும் தானாகும் நிலையையும் ஆழ்வார் சங்கித்துத் தெளிதல்) (நானாசைப்பட்டபடியே திருவடிகளை யெனக்குத் தந்தருளின சிறந்தவுதவிக்குத் கைம்மாறாக இவ்வாத்மவஸ்துவை எம்பிரானே! உனக்கு அர்ப்பணஞ் செய்தேனென்கிறார்.) 10
தாள்களை எனக்கே தலைத் தலைச் சிறப்பத் தந்த பேருதவிக் கைம்மாறா
தோள்களை யாரைத் தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன் சோதீ
தோள்கள் ஆயிரத்தாய் !முடிகள் ஆயிரத்தாய் ! துணை மலர்க் கண்கள் ஆயிரத்தாய் !
தாள்கள் ஆயிரத்தாய் !பேர்கள் ஆயிரத்தாய் ! தமியனேன் பெரிய வப்பனே !–8-1-10
தாள்களை எனக்கே தலைத்தலை சிறப்ப தந்த,Taalgalai enakke thalaiththalai sirappa thanda - (உனது) திருவடிகளை எனக்கே அஸாதாரணமாகத் தலைமேல் சிறக்கும்படி தந்தருளின
பேர் உதவி,Per uthavi - மஹோபகாரத்திற்கு
கைம்மாறு ஆ,Kaimmaru aa - பிரதியுபகாரமாக,
என் உயிரை,En uyirai - எனது ஆத்மவஸ்துவை
தோள்களை ஆர தழுவி,Tholgalai aara thazhuvi - தோள்களை நன்றாகத் தடவிக் கொடுத்து
அறவிலை செய்தனன்,Aravilai seithanan - பரிபூரண விக்ரயம் செய்து விட்டேன்
சோதீ!,Sothee! - நான் தந்தவிதனைப்பெற்று அபூர்வலாபம் பெற்றதாகக் களித்து விளங்குமவனே!
தோள்கள் ஆயிரத்தாய்,Tholgal aayiraththaai - (அந்தக்களிப்பினாலே பணைத்த) பலபலதிருத்தோள்களையுடையவனே!
முடியன் ஆயிரத்தாய்,Mudiyan aayiraththaai - பலபல திருமுடிகளையுடையவனே!
துணை மலர் கண்கள் ஆயிரத்தாய்,Thunai malar kangkal aayiraththaai - ஒன்றோடொன்றொத்த மலர் போன்ற பலபல திருக்கண்களையுடை வனே!
தாள்கள் ஆயிரத்தாய்,Taalgal aayiraththaai - பலபல திருவடிகளையுடையவனே!
பேர்கள் ஆயிரத்தாய்,Pergal aayiraththaai - பலபல திருநாமங்களை யுடையவனே!
தமியனேன் பெரிய அப்பனே,Thamiyaen periya appane - அகிஞ்சநனான வெனக்கு இன்னமும் எவ்வளவோ செய்யப் பாரித்திருக்குமவனே!