| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3457 | திருவாய்மொழி || (8-1–தேவிமாராவார்) (எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும் தானாகும் நிலையையும் ஆழ்வார் சங்கித்துத் தெளிதல்) (இப்பதிகத்திற் சொன்ன பொருள்களையெல்லாம் சுருங்கச் சொல்லி இப்பதிகம் கற்றார்க்கு எம்பெருமானைப் பெற்று உஜ்ஜீவிக்கை எளிதாமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11 | பெரிய வப்பனைப் பிரமனப்பனை உருத்திரனப்பனை முனிவர்க் குரியவப்பனை யமரரப்பனை உலகுக்குகோர் தனியப்பனை தன்னை பெரிய வண் குருகூர்ச் சடகோபன் பேணின ஆயிரத்துள்ளும் உரிய சொல் மாலை இவையும் பத்து இவற்றால் உய்யலாம் தொண்டீர் ! நம் கட்கே–8-1-11 | பெரிய அப்பனை,Periya appanai - எல்லாரினும் பெருமை பெற்றஸ்வாமியும் பிரமன் அப்பனை,Brahman appanai - உலகங்களைப்படைத்தவனான பிரமனையும் படைத்தவனும் உருத்திரன் அப்பனை,Uruthiran appanai - ஸம்ஹாரக்கடவுளாகிய ருத்ரனுக்கு தலைவனும் முனிவர்க்கு உரிய அப்பனை,Munivarkku uriya appanai - ஸநகர் முதலிய முனிவர்கட்கும் தகுதிவாய்ந்த ஸ்வாமியும் அமரர் அப்பனை,Amarar appanai - ஸகல தேவர்களுக்கும் ஸ்வாமியும் உலகுக்கு ஓர் தனி அப்பன் தன்னை,Ulakukku oru thani appan thani - ஸகல வோகங்களுக்கும் ஒப்பற்ற நாயகனுமான வனைக்குறித்து, பெரியவண் குருகூர்ச் வண் சடகோபன்,Periyavan kurukoor van sadagopan - ஆழ்வார் பேணின ஆயிரத்துள்ளும்,Penina aayiraththullum - ஆதரித்துச்சொன்ன ஆயிரத்தினுள்ளும் உரிய சொல் மாலை இவை பத்தும் இவற்றால்,Uriya sol maalai ivai paththum ivatraal - தகுந்த சொற்சேர்த்தீவாய்ந்த இப்பத்துப்பாசுரங்களினால் தொண்டீர்நங்கட்கு உய்யலாம்,Thondeernankadkku uyyaalaam - தொண்டர்களே! நாம் உஜ்ஜீவிக்கவமையும். |