Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3457 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3457திருவாய்மொழி || (8-1–தேவிமாராவார்) (எம்பெருமானது அடியார் வசமாகும் நிலையையும் யாவையும் தானாகும் நிலையையும் ஆழ்வார் சங்கித்துத் தெளிதல்) (இப்பதிகத்திற் சொன்ன பொருள்களையெல்லாம் சுருங்கச் சொல்லி இப்பதிகம் கற்றார்க்கு எம்பெருமானைப் பெற்று உஜ்ஜீவிக்கை எளிதாமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11
பெரிய வப்பனைப் பிரமனப்பனை உருத்திரனப்பனை முனிவர்க்
குரியவப்பனை யமரரப்பனை உலகுக்குகோர் தனியப்பனை தன்னை
பெரிய வண் குருகூர்ச் சடகோபன் பேணின ஆயிரத்துள்ளும்
உரிய சொல் மாலை இவையும் பத்து இவற்றால் உய்யலாம் தொண்டீர் ! நம் கட்கே–8-1-11
பெரிய அப்பனை,Periya appanai - எல்லாரினும் பெருமை பெற்றஸ்வாமியும்
பிரமன் அப்பனை,Brahman appanai - உலகங்களைப்படைத்தவனான பிரமனையும் படைத்தவனும்
உருத்திரன் அப்பனை,Uruthiran appanai - ஸம்ஹாரக்கடவுளாகிய ருத்ரனுக்கு தலைவனும்
முனிவர்க்கு உரிய அப்பனை,Munivarkku uriya appanai - ஸநகர் முதலிய முனிவர்கட்கும் தகுதிவாய்ந்த ஸ்வாமியும்
அமரர் அப்பனை,Amarar appanai - ஸகல தேவர்களுக்கும் ஸ்வாமியும்
உலகுக்கு ஓர் தனி அப்பன் தன்னை,Ulakukku oru thani appan thani - ஸகல வோகங்களுக்கும் ஒப்பற்ற நாயகனுமான வனைக்குறித்து,
பெரியவண் குருகூர்ச் வண் சடகோபன்,Periyavan kurukoor van sadagopan - ஆழ்வார்
பேணின ஆயிரத்துள்ளும்,Penina aayiraththullum - ஆதரித்துச்சொன்ன ஆயிரத்தினுள்ளும்
உரிய சொல் மாலை இவை பத்தும் இவற்றால்,Uriya sol maalai ivai paththum ivatraal - தகுந்த சொற்சேர்த்தீவாய்ந்த இப்பத்துப்பாசுரங்களினால்
தொண்டீர்நங்கட்கு உய்யலாம்,Thondeernankadkku uyyaalaam - தொண்டர்களே! நாம் உஜ்ஜீவிக்கவமையும்.