Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3460 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3460திருவாய்மொழி || (8-2—நங்கள்) (தலைவனை நோக்கி ச்செல்லக்கருதிய தலைவி கூற்று) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –நாங்கள் சொல்ல விட்டிலையே யாகிலும் நீயே இளைத்து விடுகிறாய் இ றே -என்ன நித்ய கால தத்வம் முடியிலும் நான் அவனைக் கண்டு அல்லது விடேன் -என்கிறாள்.) 3
காலம் இளைக்கில் அல்லால் வினையேன் நான்
இளைக்கின்றிலன் கண்டு கொண்மின்
ஞாலம் அறியப் பழி சுமந்தேன் நன்னுதலீர் !
இனி நாணித் தான் என் ?
நீலமலர் நெடுஞ்சோதி சூழ்ந்த
நீண்ட முகில் வண்ணன் கண்ணன் கொண்ட
கோல வளை யோடு மாமை கொள்வான்
எத்தனை காலமும் கூடச் சென்றே–8-2-3
நீலம் மலர் நெடு சோதி சூழ்ந்த,Neelam malar nedu sothi soozhntha - நீலநிறத்தாய் எங்கும் வியாபித்ததாய் எல்லைகாண வொண்ணாத்தான தேஜஸ்ஸாலே சூழப்பட்ட
நீண்ட முகில்வண்ணன் கண்ணன்,Neenda mukilvannan kannan - மஹா முகம்போலே இருக்கிற நிறத்தையுடைய கண்ணபிரான்
கொண்ட,Konda - அபஹரித்துக்கொண்ட
கோலம்வளையொ,Kolamvalaiyo - அழகிய வளைகளையும் மேனி நிறத்தையும்
எத்தனை காலமும் கூட சென்றே கொள்வான்,Eththanai kaalamum kooda sendru kolvaan - அநேக காலம் கூடவே சென்றாகிலும் மீட்டுக் கொள்ளுகைக்காக
ஞாலம் அறிய பழி சுமந்தேன் நல் நுதலீர்,Njaalam ariya pazhi sumandhen nal nudhalir - உலகமெல்லா மறியும்படிபடி கடந்து புறப்பட்டாளென்கிறபழியைப் பெற்றேன்,
இனி நாணி தான் என்,Ini naani thaan en - விலக்ஷணமான நெற்றியை யுடைய தோழிகளே!
இனி நாணி தான் என்,Ini naani thaan en - இனி லஜ்ஜித்துத் தான் பயனுண்டோ?
காலம் இளைக்கில் அல்லால்,Kaalam ilaikkil allaal - காலம் முடிந்துபோமித்தனை யல்லது.
வினையேன் நான் இளைக்கின்றிலன் கண்டுகொள் மின்,Vinaiyen naan ilaikkindrilan kandukolmin - விளையாட்டியேனான நான் இளைத்து மீளமாட்டேன் இதை அனுபவத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்.