திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3460 | திருவாய்மொழி || (8-2—நங்கள்) (தலைவனை நோக்கி ச்செல்லக்கருதிய தலைவி கூற்று) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –நாங்கள் சொல்ல விட்டிலையே யாகிலும் நீயே இளைத்து விடுகிறாய் இ றே -என்ன நித்ய கால தத்வம் முடியிலும் நான் அவனைக் கண்டு அல்லது விடேன் -என்கிறாள்.) 3 | காலம் இளைக்கில் அல்லால் வினையேன் நான்
இளைக்கின்றிலன் கண்டு கொண்மின்
ஞாலம் அறியப் பழி சுமந்தேன் நன்னுதலீர் !
இனி நாணித் தான் என் ?
நீலமலர் நெடுஞ்சோதி சூழ்ந்த
நீண்ட முகில் வண்ணன் கண்ணன் கொண்ட
கோல வளை யோடு மாமை கொள்வான்
எத்தனை காலமும் கூடச் சென்றே–8-2-3 | பதவுரை Show / Hideநீலம் மலர் நெடு சோதி சூழ்ந்த,Neelam malar nedu sothi soozhntha - நீலநிறத்தாய் எங்கும் வியாபித்ததாய் எல்லைகாண வொண்ணாத்தான தேஜஸ்ஸாலே சூழப்பட்ட நீண்ட முகில்வண்ணன் கண்ணன்,Neenda mukilvannan kannan - மஹா முகம்போலே இருக்கிற நிறத்தையுடைய கண்ணபிரான் கொண்ட,Konda - அபஹரித்துக்கொண்ட கோலம்வளையொ,Kolamvalaiyo - அழகிய வளைகளையும் மேனி நிறத்தையும் எத்தனை காலமும் கூட சென்றே கொள்வான்,Eththanai kaalamum kooda sendru kolvaan - அநேக காலம் கூடவே சென்றாகிலும் மீட்டுக் கொள்ளுகைக்காக ஞாலம் அறிய பழி சுமந்தேன் நல் நுதலீர்,Njaalam ariya pazhi sumandhen nal nudhalir - உலகமெல்லா மறியும்படிபடி கடந்து புறப்பட்டாளென்கிறபழியைப் பெற்றேன், இனி நாணி தான் என்,Ini naani thaan en - விலக்ஷணமான நெற்றியை யுடைய தோழிகளே! இனி நாணி தான் என்,Ini naani thaan en - இனி லஜ்ஜித்துத் தான் பயனுண்டோ? காலம் இளைக்கில் அல்லால்,Kaalam ilaikkil allaal - காலம் முடிந்துபோமித்தனை யல்லது. வினையேன் நான் இளைக்கின்றிலன் கண்டுகொள் மின்,Vinaiyen naan ilaikkindrilan kandukolmin - விளையாட்டியேனான நான் இளைத்து மீளமாட்டேன் இதை அனுபவத்தில் பார்த்துக்கொள்ளுங்கள். |