Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3466 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3466திருவாய்மொழி || (8-2—நங்கள்) (தலைவனை நோக்கி ச்செல்லக்கருதிய தலைவி கூற்று) (கீழ்ப்பாட்டில் * கடைபறப்பாசங்கள் விட்ட பின்னையன்றி அவனவைகாண் கொடானே * என்று கூறின தலைவியை நோக்கி நங்காய்! எங்களோடு உறவை வேணுமாகில் நீ விட்டுத் தொலைக்கலாமேயொழிய அவன் காட்சி கொடுப்பதென்பது சொல்ல, எல்லாம் பண்டே இழந்தாயிற்றன்றோ, இன்னமும் இழக்க என்னவிருக்கிறது? என்று அவர்களுக்குச் சொல்லுகிறாள்.) 9
காண் கொடுப்பான் அல்லனார்க்கும் தன்னைக்
கை செயப் பாலதோர் மாயம் தன்னால்
மாண் குறள் கோல வடிவு காட்டி
மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த
சேண் சுடர்த் தோள்கள் பல தழைத்த
தேவ பிராற்கு என் நிறைவினோடு
நாண் கொடுத்தேன் இனி என் கொடுக்கேன்
என்னுடை நன்னுதல் நங்கைமீர்காள்–8-2-9
ஆர்க்கும்,Aarkkum - எப்படிப்பட்ட பேரளவுடையார்க்கும்
தன்னை காண் கொடுப்பான் அல்லன்,Thannai kaan koduppaan allan - தன்னைக் காணக் கொடாத வனாயிருந்து வைத்து
மாயம் தன்னால்,Maayam thannal - தனது வஞ்சனத்தினாலே
கை செய் அப்பாலது ஓர்,Kai sei appaaladhu oor - அக்ருத்ரிம்மாய் அத்னிதீயமான
கோலம் மாண் குறள் வடிவு,Kolam maan kural vadivu - ஸௌந்தரியத்தையுடைய யாசகவாமன வேஷத்தை
காட்டி,Kaatri - (மஹாபலிக்கு) வெளிக்காட்டி (உடனே)
மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த,Mannum vinnum niraiya malarntha - மண்ணுலகும் விண்ணுலகும் நிறையும்படியாக வியாபிதவனாய்
சேண் சுடர் பல தோள்கள் தழைத்த,Seen sudar pala tholgal thazhaiththa - ஓங்கி விளங்காநின்ற பல திருத்தோள்களும் தழைத்திருக்கிற
தேவபிராற்கு,Devapiraarku - தேவபிரானான எம்பெருமானுக்கு
என் நிறைவினோடு,En niraivinaalodu - என்னுடைய ஸ்த்ரீத்வபூர்த்தியோடே கூட
நாண் கொடுத்தேன்,Naan koduththen - லஜ்ஜையையும் இழந்தேன்,
நல் நுதல் என்னுடைய நங்கைமீர்காள்,Nal nudhal ennudaiya nangai meerkaal - விலக்ஷணமான திருமுக மண்டலத்தையுடையீர்களாயிருக்கிற என்னுடைய தோழிகளே!
இனி என் கொடுக்கேன்,Ini en kodukkaen - இன்னமும் என்ன இழக்கக்கடவேன்?