Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3468 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3468திருவாய்மொழி || (8-2—நங்கள்) (தலைவனை நோக்கி ச்செல்லக்கருதிய தலைவி கூற்று) (இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பயனுரைத்துத் தலைக்கட்டுகிற பாசுரமிது, உபயவிபூதியிலும் பகவதநுபவமே யாத்திரையாயிருப்பதே இத்திருவாய்மொழி கற்கைக்குப் பலன் என்கிறது.) 11
பாதமடைவதன் பாசத்தாலே
மற்றவன்பாசங்கள் முற்ற விட்டு
கோதில் புகழ்க் கண்ணன் தன்னடி மேல்
வண் குருகூர் சடகோபன் சொன்ன
தீதில் அந்தாதி ஓர் ஆயிரத்துள்
இவையுமோர் பத்திசை யோடும் வல்லார்
ஆதுமோர் தீதிலராகி
இங்கு மங்கு மெல்லாம் அமைவார்கள் தாமே–8-2-11
பாதம் அடைவதன் பாசத்தாலே,Paadam adainvadhane paasaththaale - திருவடியை யடைவதிலுண்டான ஆசையினால்
மற்ற வல் பாசங்கள் முற்ற விட்டு,Matra val paasangal muttra vittu - புறம்புண்டான பற்றுக்களையடைய வாஸனையோடேவிட்டு
கோது இல் புகழ் கண்ணன் தன் அடிமேல்,Koothu il pugazh kannan than adimael - கோதற்ற புகழையுடைய கண்ணபிரானது திருவடி விஷயமாக.
வண் குருகூர் சடகோபன் சொன்ன,Van kurukoor sadagopan sonna - உதாரரான ஆழ்வார் அருளிச்செய்த
தீது இல் அந்தாதி ஓர் ஆயிரத்துள்,Theethu il andhaadhi oor aayiraththul - தீதற்றதாய் அந்தாதித் தொரடையாயமைந்த ஆயிரத்துள்
இவையும் ஓர் பத்து,Ivaiyum oor paththu - இவை பத்தையும்
இசையோடும் வல்லார் தாம்,Isaiyodum vallaar thaam - இசையோடுங்கூடப் பயிலவுல்லவர்கள்
ஆதும் ஓர் தீது இலர் ஆகி,Aadhum oor theethu ilar aagi - ஒருவகைக்குற்றமுமற்றவர்களாகி
இங்கும் அங்கும்,Ingum angum - உபய விபூதியிலும்
எல்லாம் அமைவார்கள்,Ellam amaivargal - எல்லாவகை நிறைவும் பெற்று விளங்குவர்