| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3469 | திருவாய்மொழி || (8-3–அங்கும் இங்கும் ) (எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அருளால் உணர்ந்து ஆழ்வார் அச்சம் தீர்தல்) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -அவன் ஸுகுமார்யத்தை அனுசந்தித்து பரிகை இன்றிக்கே அவனை தங்களுக்கு இஷ்ட பிராப்தி சாதனம் என்று ஐஸ்வர் யாதிகளை ஷேபிக்கிறார்.) 1 | அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும் எங்குமினையை யென்றுன்னை அறியகிலாதலற்றி அங்கம் சேரும் பூ மகள் மண் மகளாய் மகள் சங்கு சக்கரக் கையவனென்பர் சரணமே–8-3-1 | அங்கும் இங்கும் எங்கும்,Angum ingum engum - மேலுலகங்களிலும் இவ்வுலகத்திலும் மற்றுமெவ்வுலகங்களிலுமுள்ள வானவர் தானவர் யாவரும்,Vaanavar thaanavar yaavarum - தேவர்கள் அசுரர்கள் முதலான யாவரும் உன்னை இனையை என்று அறியகிலாது அலற்றி,Unnai inaiyai enru ariyagilaadhu alatri - உன்னை உள்ளபடி அறியப்பெறாது எதையோ சொல்லிக் கூப்பிட்டு பூமகள் மண்மகள் ஆய் மகள்,Poomagal manmagal aai magal - ஸ்ரீதேவி பூதேவி நீளாதேவி யென்னும் தேவிமார் அங்கம் சேரும்,Angam serum - திருமேனியில் சேர்ந்திருக்கப்பெற்றார்களென்றும். சங்கு சக்கரம் கையவன்,Sangu sakkaram kaiyavan - திருவாழி திருச்சங்குகளைத் திருக்கையிலேந்திய பெருமான் சரணம் என்பர்,Saranam enbar - நம்முடைய ஆபத்துக்களைப் போக்கவல்லவன் என்றும் ரக்ஷ்கத்வ மாத்ரத்தையே அநுஸந்தித்திருப்பர்கள். |