திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3471 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3471திருவாய்மொழி || (8-3–அங்கும் இங்கும் ) (எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அருளால் உணர்ந்து ஆழ்வார் அச்சம் தீர்தல்) (கீழிரண்டுபாட்டுக்களிலே தமக்கு ஒருவரும் துணையில்லையென்று சொன்ன முகத்தாலே தம்முடைய தனிமையை வெளியிட்டாராயிற்று. இப்படி தம்முடைய தனிமையைச் சொன்ன ப்ரஸங்கத்தாலே அவனுடைய தனிமையை நினைத்து வருத்துகிறாரிப்பட்டால்.) 3
ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம் வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை தாளும் தோளும் கைகளை யாரத் தொழக் காணேன் நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே–8-3-3
பதவுரை Show / Hide
ஆளும் ஆளார்,Aalum aalaar - (கைங்கர்யத்திற்காக) ஒரு ஆளையும் வைத்துக்கொள்ளுகிறாரில்லை.
ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்,Aaziyum sangum sumappar thaam - திருவாழி திருச்சங்குகளைச் சுமப்பவர் தாமேயாயிருக்கிறாரே
வாளும் வில்லும் கொண்டு,Vaalum villum kondu - நந்தக்வாளையும் சார்கவில்லையுங் கொண்டு
பின் செல்வார் மற்று இல்லை,Pin selvaar matru illai - பின் செல்லுகைக்கு ஒருவருமில்லையே,
தாளும் தோளும்,Thaalum tholum - திருவடிகளிலும் திருத்தோள்களிலு மீடுபட்டு
கைகளை ஆர தொழ காணேன்,Kaigalai aara thoza kaaneen - கையாரத் தொழுபாரையுங் காண்கின்றிலேன் (ஆதலால்)
ஞாலத்து அடியேன் நாளும் நாளும் நாடுவன்,Gnaalathu adiyen naalum naalum naaduvan - இவ்விபூதியிலே அடியேன் நாள்தோறும் பின் செல்லப்பாராநின்றேன்.