Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3471 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3471திருவாய்மொழி || (8-3–அங்கும் இங்கும் ) (எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அருளால் உணர்ந்து ஆழ்வார் அச்சம் தீர்தல்) (கீழிரண்டுபாட்டுக்களிலே தமக்கு ஒருவரும் துணையில்லையென்று சொன்ன முகத்தாலே தம்முடைய தனிமையை வெளியிட்டாராயிற்று. இப்படி தம்முடைய தனிமையைச் சொன்ன ப்ரஸங்கத்தாலே அவனுடைய தனிமையை நினைத்து வருத்துகிறாரிப்பட்டால்.) 3
ஆளுமாளார் ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்
வாளும் வில்லும் கொண்டு பின் செல்வார் மற்றில்லை
தாளும் தோளும் கைகளை யாரத் தொழக் காணேன்
நாளும் நாளும் நாடுவன் அடியேன் ஞாலத்தே–8-3-3
ஆளும் ஆளார்,Aalum aalaar - (கைங்கர்யத்திற்காக) ஒரு ஆளையும் வைத்துக்கொள்ளுகிறாரில்லை.
ஆழியும் சங்கும் சுமப்பார் தாம்,Aaziyum sangum sumappar thaam - திருவாழி திருச்சங்குகளைச் சுமப்பவர் தாமேயாயிருக்கிறாரே
வாளும் வில்லும் கொண்டு,Vaalum villum kondu - நந்தக்வாளையும் சார்கவில்லையுங் கொண்டு
பின் செல்வார் மற்று இல்லை,Pin selvaar matru illai - பின் செல்லுகைக்கு ஒருவருமில்லையே,
தாளும் தோளும்,Thaalum tholum - திருவடிகளிலும் திருத்தோள்களிலு மீடுபட்டு
கைகளை ஆர தொழ காணேன்,Kaigalai aara thoza kaaneen - கையாரத் தொழுபாரையுங் காண்கின்றிலேன் (ஆதலால்)
ஞாலத்து அடியேன் நாளும் நாளும் நாடுவன்,Gnaalathu adiyen naalum naalum naaduvan - இவ்விபூதியிலே அடியேன் நாள்தோறும் பின் செல்லப்பாராநின்றேன்.