Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3473 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3473திருவாய்மொழி || (8-3–அங்கும் இங்கும் ) (எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அருளால் உணர்ந்து ஆழ்வார் அச்சம் தீர்தல்) (கீழ்ப்பாட்டிலே * ஆலம் பேரிலை அன்னவசஞ் செய்யும்மமானே! * என்று ப்ரளயார்ணவத்திலே தனியே கண்வளர்ந்தருளினவிடத்திற்கு வயிறெரிந்த ஆழ்வாருடைய வயிற்றெரிச்சல், தீர, திருக்கோளூரிலும் திருப்புளிங்குடியிலும் பரிவர் பலர் புடை சூழத் திருக்கண்வளர்ந்தருளாநின்றபடியைக் காட்டிக்கொடுக்க, இக்கிடைகளிலே யீடுபட்டு பேசுகிறார்.) 5
கொடியார் மாடக் கோளூரகத்தும் புளிங்குடியும்
மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியார் அல்லல் தவிர்த்த வஸைவோ அன்றேலிப்
படி தான் நீண்டு தாவிய வசவோ பணியாயே–8-3-5
கொடி ஆர் மாடம்,Kodi aar maadam - கொடிகள் நிறைந்த மாடங்களையுடைய
கோளுர் அகத்தும் புளிங்குடியும்,Kolur agatthum pulingudiyum - திருக்கோளூரிலும் திருப்புளிங்குடியிலும்
மடியாது,Madiyaadhu - இடம் வலங்கொள்ளாமல்
இன்னே,Inne - இன்று காணும் விதமாகவே
நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்,Nee thuyil mevi magizhnthathu thaan - நீ சயனத்தை விரும்பி மகிழ்ந்து திருக்கண் வளர்ந்தருள்வதானது
அடியார் அல்லம் தவிர்த்த அசவோ,Adiyaar allam thavirtttha asavo - (பல திருவ்வதாரங்கள் செய்து) அடியார்களின் துன்பங்களைப் போக்கின சிரமத்தினாலோ?
அன்றேல்,Andrael - அல்லது
இப்படி,Eppadi - இப்பூமியை
நீண்டு தாவிய அசவு தானோ,Neendu thaaviya asavu thaano - ஓங்கியுளந்த சிரமத்தினாலோ?
பணியாய்,Paniyaai - கூறியருளவேணும்.