| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3473 | திருவாய்மொழி || (8-3–அங்கும் இங்கும் ) (எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அருளால் உணர்ந்து ஆழ்வார் அச்சம் தீர்தல்) (கீழ்ப்பாட்டிலே * ஆலம் பேரிலை அன்னவசஞ் செய்யும்மமானே! * என்று ப்ரளயார்ணவத்திலே தனியே கண்வளர்ந்தருளினவிடத்திற்கு வயிறெரிந்த ஆழ்வாருடைய வயிற்றெரிச்சல், தீர, திருக்கோளூரிலும் திருப்புளிங்குடியிலும் பரிவர் பலர் புடை சூழத் திருக்கண்வளர்ந்தருளாநின்றபடியைக் காட்டிக்கொடுக்க, இக்கிடைகளிலே யீடுபட்டு பேசுகிறார்.) 5 | கொடியார் மாடக் கோளூரகத்தும் புளிங்குடியும் மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான் அடியார் அல்லல் தவிர்த்த வஸைவோ அன்றேலிப் படி தான் நீண்டு தாவிய வசவோ பணியாயே–8-3-5 | கொடி ஆர் மாடம்,Kodi aar maadam - கொடிகள் நிறைந்த மாடங்களையுடைய கோளுர் அகத்தும் புளிங்குடியும்,Kolur agatthum pulingudiyum - திருக்கோளூரிலும் திருப்புளிங்குடியிலும் மடியாது,Madiyaadhu - இடம் வலங்கொள்ளாமல் இன்னே,Inne - இன்று காணும் விதமாகவே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்,Nee thuyil mevi magizhnthathu thaan - நீ சயனத்தை விரும்பி மகிழ்ந்து திருக்கண் வளர்ந்தருள்வதானது அடியார் அல்லம் தவிர்த்த அசவோ,Adiyaar allam thavirtttha asavo - (பல திருவ்வதாரங்கள் செய்து) அடியார்களின் துன்பங்களைப் போக்கின சிரமத்தினாலோ? அன்றேல்,Andrael - அல்லது இப்படி,Eppadi - இப்பூமியை நீண்டு தாவிய அசவு தானோ,Neendu thaaviya asavu thaano - ஓங்கியுளந்த சிரமத்தினாலோ? பணியாய்,Paniyaai - கூறியருளவேணும். |