Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3476 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3476திருவாய்மொழி || (8-3–அங்கும் இங்கும் ) (எம்பெருமானுக்கு எங்கும் அன்புடையார் உளர் என்பதை அருளால் உணர்ந்து ஆழ்வார் அச்சம் தீர்தல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –உன் திருவடிக்கு கீழ் என்னை நிலையாளாக கொள்வது என்று -என்று எம்பெருமானை ஆழ்வார் கேட்க்கிறார்.) 8
என்றே என்னை உன் ஏரார் கோலத்திருந்து அடிக் கீழ்
நின்றே ஆட்செய்ய நீ கொண்டருள நினைப்பது தான்
குன்றேழ் பாரேழ் சூழ் கடல் ஞாலம் முழு வேழும்
நின்றே தாவிய நீள் கழல் ஆழித் திருமாலே-8-3-8
ஏழ் குன்று,Ezhu kunru - குலபர்வதங்களேழையும்
எழ் பார்,Ezhu paar - தீவுகளேழையும்
சூழ்,Soozh - சூழ்ந்த
கடல்,Kadal - ஸமுத்ரங்களையும்
ஏழ் ஞாலமும்,Ezhu gnaalamum - ஏழுலகங்களையும்
முழு,Muzhu - முழுக்க
நின்றே தாவிய,Nindre thaaviya - நின்ற நிலையிலே நின்று ஆக்கிரமித்துக்கொண்ட
நீள் கழல்,Neel kazhal - நெடிய திருவடிகளை யுடையையாய்
ஆழி,Aazhi - திருவாழியையுமுடையையான
திருமாலே,Thirumaale - திருமகள் கொழுநனே!
என்னை,Ennai - அடியேனை
கோலம் திருந்து அடி கீழ்,Kolam thirundhu adi keezh - தேவரீருடைய அழகு விஞ்சின திருவடிகளின் கீழே
நின்றே ஆள் செய்ய,Nindre aal seiyya - நிலைநின்று அடிமை செய்வேனாம்படி
நீ கொண்டருள நினைப்பது தான் என்றே,Nee kondarula ninaippathu thaan endre - தேவரீர் அங்கீகரிக்கத் திருவுள்ளம்பற்றுவது என்றைக்கோ?