| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3489 | திருவாய்மொழி || (8-4–வார்கடா ) (எம் பெருமானது வலிமை அவன் அன்புடையாருடன் அமர்ந்திருக்கும் சேர்த்தி முதலியவற்றைத் திருச்செங்குன்றூரில் கண்டு மகிழ்தல் (திருச்செங்குன்றூர்)) (ஸர்வேச்வரனாயிருந்து வைத்து ஸகல ப்ராணிகளும் ஆச்ரயிக்கலாம்படி திருச்சிற்றாற்றுப்பதியிலே நின்றருளும் பெருமானைப் பெற்றேனென்கிறார்.) 10 | அமர்ந்த நாதனை யவரவராகி அவரவர்கருளும் அம்மானை அமர்ந்த தண் பழனத் திருச் செங்குன்றூரில் திருச் சிற்றறாங்கரையானை அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்கள் தம்பதி அவனிதேவர் வாழ்வு அமர்ந்த மாயோனை முக்கண் அம்மானை நான்முகனை யமர்ந்தேனே–8-4-10 | அமர்ந்த நாதனை,Amarnthu naadhanai - நாதனென்றால் தகும் தகுமென்னும்படியான நாதனாய் அவர் அவர் ஆகி,Avar avar aagi - தன் பக்கலில் அர்த்திகளாக வருவாரெல்லார்க்கும் அபிமாரியாய் அவர்க்கு அருள் அருளும் அம்மானை,Avarukku arul arulum ammaanai - அவர்கட்கு அபிஷ்டங்களை யளித்தருளும் ஸவாமியாய் அமர்ந்த தண் பழனம்,Amarnthu than pazhanam - செறிந்து குளிர்ந்த நீர் நிலங்களையுடைய திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாற் றங்கரையானை,Thiruchchengundrooril thiruchchiraar thangaraiyaanai - திருச்சிற்றாற்றுப் பதியிலெழுந்தருளியிருப்பவனுமாய் அமர்ந்த சீர் மூவாயிரவர் வேதியர்,Amarnthu seer moovaayiravar vedhiyar - ஸ்ரீமான்களான மூவாயிரம் பிராமணர்களுக்கு வாஸஸ்தானமாய் அவனி தேவர் வாழ்வு,Avani dhevar vaazhvum - நிலத்தேவர்களான ஸ்ரீ வைஷ்ணவர்கள் வாழுமிடமான அப்பதியிலே அமர்ந்த மானோனை,Amarnthu maanonai - பொருந்தியெழுந்தருளியிருக்கு மாச்சர்ய பூதனுமாய் முக்கண் அம்மானை நான் முகனை,Mukkan ammaanai naan muganai - சிவனுக்கு பிரமனுக்கும் அந்தர்யாமியுமான பெருமானை அமர்ந்தேன்,Amarnthen - கிட்டப் பெற்றேன். |