Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3490 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3490திருவாய்மொழி || (8-4–வார்கடா ) (எம் பெருமானது வலிமை அவன் அன்புடையாருடன் அமர்ந்திருக்கும் சேர்த்தி முதலியவற்றைத் திருச்செங்குன்றூரில் கண்டு மகிழ்தல் (திருச்செங்குன்றூர்)) (இத்திருவாய்மொழி கற்கைக்கு, ஸம்ஸார நிவ்ருத்தியையும் பரமபதப்ராப்தியையும் பயனாகவருளிச் செய்கிறார்.) 11
தேனை நன் பாலைக் கன்னலை யமுதைத்
திருந்துலகுண்ட வம்மானை
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ்
மலர்மிசைப் படைத்த மாயோனை
கோனை வண் குருகூர் சடகோபன்
சொன்ன வாயிரத்துள் இப்பத்தும்
வானின் மீதேற்றி யருள் செய்து முடிக்கும்
பிறவி மா மாயக் கூத்தினையே–8-4-11
தேனை நன் பாலை கன்னலை அமுதே,Thenai nan paalai kannalai amudhe - தேனும் பாலும் கன்னலும் அமுதும் போலப் பரமபோக்யனாய்
இருந்து உலகு உண்ட அம்மானை வானம் நான்முகனை,Irundhu ulagu unda ammaanai vaanam naanmuganai - கட்டளைப்பட்ட ஜகத்தைக் காத்தருளின பெருமானாய் வானுலகத்தவனான சதுர் முகனை
மலர்ந்த தண் கொப்பூழ் மலர் மிசை படைத்த மாயோனை,Malarndha than koppool malar misai padaitha maayoonai - மலர்ந்து குளிர்ந்த திருநாபிக்கமலத்திலே யுண்டாக்கின் ஆச்சரிய பூதனுமான
கோனை,Koanai - ஸர்வேச்வரனைக்குறித்து
வண் குருகூர் வண் சடகோபன்,Van kurukoor van sadagopan - ஆழ்வார்
சொன்ன ஆயிரத்துள்,Sonna aayiraththul - அருளிச்செய்த ஆயிரத்து னுள்ளும்
இப் பத்தும்,Eppaththum - இத்திருவாய்மொழியானது
வானின் மீது ஏற்றி,Vaanin meedhu aetri - பரமபதத்திலே ஏறவிட்டு
அருள் செய்து,Arul seydhu - பகவத் கைங்கர்ய ப்ராப்து யாகிற அருளைச் செய்வித்து
பிறவி மா மாயம் கடத்தினை முடிக்கும்,Piravi maa maayam kadaththinai mudikkum - ஸம்ஸாரமாகிற ஆச்சர்ய நாடகத்தை முடித்துவிடும்.