திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3491 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3491திருவாய்மொழி || (8-5–மாயக் கூத்தா) (எம்பெருமானது வடிவழகைக் காணப்பெறாத ஆழ்வார் ஆசை மிகுந்து அழுது அரற்றுதல்) (கண்டவளவிலே விடாயெல்லாம் தீரும்படியான தொரு தாமரைத் தடாகம் போலே நான் காணும்படி வந்தருள வேணுமென்று வேண்டுகிறார்.) 1
மாயக் கூத்தா வாமனா வினையேன் கண்ணா கண் கை கால் தூய செய்ய மலர்களா சோதித் செவ்வாய் முகிழதா சாயல் சாமத் திருமேனி தண் பாசடையா தாமரை நீள் வாசத்தடம் போல் வருவானே ஒரு நாள் காண வாராயே–8-5-1
பதவுரை Show / Hide
மாயக் கூத்தா,Maayak koothaa - ஆச்சரிய சேஷ்டிதங்களை யுடையவனே!
வாமனா,Vaamana - வாமன லேஷங்கொண்டவனே!
வினையேன் கண்ணா,Vinaiyen kannaa - மஹாபாபியான என்கைக்கு எட்டாத க்ருஷ்ணனே!
கண் கைகால் தூய செய்ய மலர்களா,Kan kaikaal thoooya seiya malargalaa - திருக்கண்களும் திருக்கைகளும் திருவடிகளும் சிவந்தலர்ந்த பூக்களாகவும்
சோதி செம் வாய் முகிழதா,Sothi sem vaai mugizhathaa - அழகிய சிவந்த திருவதரம் முகுளமாகவும்
சாமம் சாயல் திருமேனி தண் பாசு அடையா,Saamam saayal thirumeeni than paasam adaiyaa - சாமளமான சாயலையுடைய திருமேனி குளிர்ந்து பசுமை தங்கிய இலையாகவும் பெற்று
நீள் வாசம் தாமரை தடம் போல் வருவானே,Neel vaasam thamarai thadam pool varuvaane - பெரியதாய் நறுமணம் மிக்கதான தாமரைத் தடாகம் போல் வருமவனே!
ஒருநாள் காணவாராய்,Orunaal kaanavaaraai - ஒருநாளாகிலும் நான் காணும்படி வருவாயாக.