Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3491 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3491திருவாய்மொழி || (8-5–மாயக் கூத்தா) (எம்பெருமானது வடிவழகைக் காணப்பெறாத ஆழ்வார் ஆசை மிகுந்து அழுது அரற்றுதல்) (கண்டவளவிலே விடாயெல்லாம் தீரும்படியான தொரு தாமரைத் தடாகம் போலே நான் காணும்படி வந்தருள வேணுமென்று வேண்டுகிறார்.) 1
மாயக் கூத்தா வாமனா
வினையேன் கண்ணா கண் கை கால்
தூய செய்ய மலர்களா
சோதித் செவ்வாய் முகிழதா
சாயல் சாமத் திருமேனி
தண் பாசடையா தாமரை நீள்
வாசத்தடம் போல் வருவானே
ஒரு நாள் காண வாராயே–8-5-1
மாயக் கூத்தா,Maayak koothaa - ஆச்சரிய சேஷ்டிதங்களை யுடையவனே!
வாமனா,Vaamana - வாமன லேஷங்கொண்டவனே!
வினையேன் கண்ணா,Vinaiyen kannaa - மஹாபாபியான என்கைக்கு எட்டாத க்ருஷ்ணனே!
கண் கைகால் தூய செய்ய மலர்களா,Kan kaikaal thoooya seiya malargalaa - திருக்கண்களும் திருக்கைகளும் திருவடிகளும் சிவந்தலர்ந்த பூக்களாகவும்
சோதி செம் வாய் முகிழதா,Sothi sem vaai mugizhathaa - அழகிய சிவந்த திருவதரம் முகுளமாகவும்
சாமம் சாயல் திருமேனி தண் பாசு அடையா,Saamam saayal thirumeeni than paasam adaiyaa - சாமளமான சாயலையுடைய திருமேனி குளிர்ந்து பசுமை தங்கிய இலையாகவும் பெற்று
நீள் வாசம் தாமரை தடம் போல் வருவானே,Neel vaasam thamarai thadam pool varuvaane - பெரியதாய் நறுமணம் மிக்கதான தாமரைத் தடாகம் போல் வருமவனே!
ஒருநாள் காணவாராய்,Orunaal kaanavaaraai - ஒருநாளாகிலும் நான் காணும்படி வருவாயாக.