Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3492 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3492திருவாய்மொழி || (8-5–மாயக் கூத்தா) (எம்பெருமானது வடிவழகைக் காணப்பெறாத ஆழ்வார் ஆசை மிகுந்து அழுது அரற்றுதல்) (என் விடாய் கெடும்படி அழகிய மயிர் முடியுடனே வந்து தோற்றியருள வேணு மென்கிறார்.) 2
காண வாராய் என்று என்று
கண்ணும் வாயும் துவர்ந்து அடியேன்
நாணி நன்னாட்டலமந்தால்
இரங்கி யொருநாள் நீ யந்தோ
காண வாராய் கரு நாயிறுதிக்கும்
கருமா மாணிக்கம்
நாள் நன்மலைபோல் சுடர்ச் சோதி
முடிசேர் சென்னி யம்மானே–8-5-2
கரு நாயிறு உதிக்கும்,Karu naayiru udhikkum - கறுதத்தொரு ஸூர்யன் உதித்துக்கிளம்பியிருப்பதாய்
மா கரு மாணிக்கம்,Maa karu maanikkam - மஹத்தான நீல ரத்னமாய்
நாள் நல் மலை போல்,Naal nal malai pool - அப்போதுண்டான அழகிய மலை போலே
சுடர் சோதி,Sudar sothi - பரம்புகிற சுடரையுடைத்தான தேஜஸ்ஸையுடைய
முடி சேர்,Mudi seer - மயிர் முடியோடே சேர்ந்த
சென்னி அம்மானே,Chinni ammaane - திருமுடியையுடைய பெருமானே!
காணவாராய் என்று என்று,Kaanavaaraai endru endru - நான் காணும்படிவாராயென்று பலகலுஞ் சொல்லி
கண்ணும் வாயும் துவர்ந்து,Kannum vaayum thuvandu - பார்க்கிற கண்ணும் கூப்பிடுகிற வாயும் வசையறவுலர்ந்து
நாணி,Naani - வெட்கமுமடைந்து
நல் நாடு,Nal naadu - இந்த நல்ல நாட்டிலே
அடியேன் அலமந்தால்,Adiyaen alamandhaal - அடியேன் இப்படி தளர்ந்தால்
ஒரு நாள் இரங்கி நீ காண வாராய் அந்தோ,Oru naal irangi nee kaana vaarai andho - ஒரு நாளாகிலும் நீ க்ருபை பண்ணி நான் காண வருகிறிலையே, ஐயோ.