Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3493 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3493திருவாய்மொழி || (8-5–மாயக் கூத்தா) (எம்பெருமானது வடிவழகைக் காணப்பெறாத ஆழ்வார் ஆசை மிகுந்து அழுது அரற்றுதல்) (ஆபர்ணசோபையும் அவயவசோபையுமுடையவொரு காளமேகம் நடந்து வருகிறதோ வென்னலாம்படி வந்து தோன்றவேணுமென்கிற ஆவலைக் காட்டுகிறாரிதில்.) 3
முடி சேர் சென்னி யம்மா
நின் மொய் பூந்தாமத் தண் துழாய்
கடி சேர் கண்ணிப் பெருமானே
என்று என்றே ஏங்கி அழுதக்கால்
படிசேர் மகரக் குழைகளும்
பவளவாயும் நால் தோளும்
துடி சேரிடையும் அமைந்ததோர்
தூ நீர் முகில் போல் தோன்றாயே–8-5-3
முடிசேர் சென்னி அம்மா,Mudi seer chenni amma - திருவபிஷேகத்தோடு செர்ந்த திருமுடியை யுடைய ஸ்வாமியே!
நின் மொய் பூ தாமம் தண் துழாய் கடி சேர் கண்ணி பெருமானே,Nin moy poo thamaan than thuzhaai kadi seer kanni perumaanai - உனக்கு அஸாதாரணமாய்ச் செறிந்து அழகிய ஒளியை யுடைய குளிர்ந்த திருத்துழாயாகிற ஸர்வாதிகனே!
என்று என்று,Endru endru - என்றிப்படி பலகாலுஞ் சொல்லி
ஏங்கி அழுதக்கால்,Aangi azhudhakaal - பொருமிப் பொருமியழுதால்
படி சேர் மகரம் குழைகளும்,Padi seer makaram kuzhaigalum - வடிவுக்குச் சேர்ந்த மகரகுண்டலங்களும்
பவளம் வாயும்,Pavalam vaayum - பவளம் போன்ற திருவதரமும்
நால் தோளும்,Naal tholum - நான்கு திருத்தோள்களும்
துடி சேர் இடையும் அமைந்தது,Thudi ser idaiyum amaindhathu - துடிபோலே யிருக்கிற இடையுமாயமைந்த
தூ நீர் ஓர் முகில் போல் தோன்றாயே,Thoo neer or mugil pool thondraaye - தூய நீரையுடைய ஒரு காளமேகம் போலே வந்து தோன்றமாட்டேனென்கிறாயே.