| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3495 | திருவாய்மொழி || (8-5–மாயக் கூத்தா) (எம்பெருமானது வடிவழகைக் காணப்பெறாத ஆழ்வார் ஆசை மிகுந்து அழுது அரற்றுதல்) (ஸ்ரீ இருபத்து நாலாயிரப்படி -உன்னுடைய அழகு என்னுடைய ஹிருதயத்திலே ஸ்ம்ருதி விஷயமாக நின்று நலியா நின்றது -இது மறக்க விரகு சொல்ல வேணும் என்கிறார்-மறக்கும் பரிகாரம் என்னுடைய அசந்நிதானம் அன்றோ -மறவீர் -என்ன -நீ மயர்வறுக்கை யாலே -துயரறு சுடர் அடி என் மனசிலே குடி புகுந்து நலியா நின்றது -மாமேகம் என்று நீயே சொல்ல வேணும்.) 5 | சொல்ல மாட்டேன் அடியேன் உன் துளங்கு சோதித் திருப்பாதம் எல்லையில் சீரிள நாயிறு இரண்டு போல் என்னுள்ளவா அல்லல் என்னும் இருள் சேர்த்தற்கு உபாயம் என்னே ஆழி சூழ் மல்லை ஞாலம் முழுதுண்ட மா நீர்க் கொண்டல் வண்ணனே–8-5-5 | ஆழி சூழ் மல்லை ஞாலம் முழுது உண்ட,Aazhi soozh mallai nyaalam muzhudhu unda - கடல் சூழ்ந்த பெரிய ஜகத்தையெல்லாம் பிரளயங்கொள்ளாமல் திருவயிற்றிலடக்கினவனாயும் மா நீர் கொண்டல் வண்ணனே,Maa neer kondal vannaney - நிரம்பின நீரையுடைய காளமேகம் போன்ற வடிவையுடையனாயுமிருக்கின்ற பெருமானே! அடியேன் சொல்ல மாட்டேன்,Adiyaen sollaa maatten - (என்னுள்ளத்திலுள்ள வெளிச்சத்தைப் பற்றி) அடியேன் ஒன்றும் சொல்ல தெரியாதவனாயிருக்கின்றேன். (ஆனாலும் சிறிது சொல்லுகின்றேன்) உன் துளங்கு சோதி தரு பாதம்,Un thulangku sothi tharu paatham - உன்னுடைய விளங்கும் சோதியுடைய திருவடிகளானவை எல்லை இல் சீர் இளஞாயிறு இரண்டு போல்,Ellai il seer ilanjaiyiru iraandu pool - அளவிறந்த அழகையுடைய இரண்டு பாலாத்தியர்களைப் போல என் உள்ளே வா,En ullae vaa - என்னுளத்துள்ளே யிராநின்றன. அல்லன என்னும், இருள் சேர்தற்கு, உபாயம் என்னே,Allana ennumn, irul serththarku, upaayam ennae - துக்கமென்று சொல்லப்பட்டுகற மறப்பென்கிற இருள் வந்து சேருவதற்கு எது வியோ அதை சொல்லுவேணும். |