| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3497 | திருவாய்மொழி || (8-5–மாயக் கூத்தா) (எம்பெருமானது வடிவழகைக் காணப்பெறாத ஆழ்வார் ஆசை மிகுந்து அழுது அரற்றுதல்) (கீழ்ப்பாட்டில் * தொண்டனேன் உன் கழல் காண வொரு நாள் வந்து தோன்றாய் * என்றார், இங்கேற வந்து தோற்றுவது முடியாதென்னில், என்னை ஆங்கே யழைத்து அடிமை கொள்ளவாவது வேண்டுமென்கிறாரிப்பாட்டில்.) 7 | வந்து தோன்றாயன்றேல் உன் வையம் தாய மலரடிக் கீழ் முந்தி வந்து யான் நிற்ப முகப்பே கூவிப் பணி கொள்ளாய் செந்தண் கமலக் கண் கை கால் சிவந்த வாயோர் கரு நாயிறு அந்தமில்லாக் கதிர் பரப்பி அலர்ந்தது ஒக்கும் அம்மானே–8-5-7 | செம் தண் கமலம்,Sem than kamalam - சிவந்து குளிர்ந்த தாமரை போன்ற கண் கை கால் சிவந்த வாய்,Kan kai kaal sivandha vaay - கண்களையும் கைகளையும் கால்களையும் சிவந்த வாயையுமுயை ஓர் கரு நாயிறு,OrKaru naayiru - ஒரு கரிய ஸூர்யன் அந்தம் இல்லா கதர் பரப்பி,Andham illaa kathar parappi - முடிவில்லாத கிரணங்களைப் பரப்பி அலர்ந்தது ஒக்கம் அம்மானே,Alarnthathu okkam ammaanai - பரம்பினாற்போன்ற வடிவழகையுடைய ஸ்வாமியே! வந்து தோன்றாய் அன்றேல்,Vandhu thondraaye andrel - (கீழே விரும்பினபடி) வந்து தோன்றா விட்டாலும் வையம் தாய உன் மலர் அடி கீழ்,Vaiyam thaaya un malar adi keezh - பூமியையளந்து கொண்ட உனது பாதாரவிந்தங்களின் கீழே யான் முந்திவந்து நிற்ப,Yaan mundhivandu nirpa - நான் முற்பட்டு வந்து நிற்கும்படியாக முகப்பே கூவி பணி கொள்ளாய்,Mukappe koovi pani kollai - திரு முன்பே யழைத்து அடிமை கொண்டருள வேணும். |