Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3498 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3498திருவாய்மொழி || (8-5–மாயக் கூத்தா) (எம்பெருமானது வடிவழகைக் காணப்பெறாத ஆழ்வார் ஆசை மிகுந்து அழுது அரற்றுதல்) (பிரானே! போலிகண்டு வருந்துமவனாய் நானிருக்க, ஆச்ரிதபக்ஷபாதியான நீ வந்து தோன்றுகின்றிலையே, இது உன் ஸ்வபாவத்திற்குச் சேருமோ? என்கிறார்.) 8
ஒக்கும் அம்மான் உருவம் என்று
உள்ளம் குழைந்து நாணாளும்
தொக்கமே கப்பல் குழாங்கள்
காணும் தோறும் தொலைவன் நான்
தக்க வைவர் தமக்காயன்று
ஈரைம்பதின்மர் தாள் சாய
புக்க நல் தேர்ப் தனிப் பாகா
வாராயிதுவோ பொருத்தமே–8-5-8
தொக்க மேகம் பல் குழாங்கள் காணும் தோறும்,Thokka meagam pal kuzhaangal kaanum thorum - திரண்ட மேகங்களின் பல திரள்களைக் காணகிற போதெல்லாம்
அம்மான் உருவம் ஒக்கும் என்று,Ammaan uruvam okkum endru - எம்பெருமானுடைய வடிவழகுக்குப் பொலியாயிருக்குமென்று
உள்ளம் குழைந்து,Ullam kuzhaindhu - நெஞ்சுருகி
நாள் நாளும் நான் தொலைவன்,Naal naalum naan tholaiyan - நாடோறும் நான் கிலேசப்படுவேன்
அன்று,Andru - பாரதப்போர் நடந்த வக்காலத்தில்
தக்க ஐவர் தமக்கு ஆய்,Thakka aivar thamakku aay - உன்னுறவுக்குத தகுதியான பஞ்ச பாண்டவர்களுக்காக
ஈர் ஐம்பதின்மர்,Eer aimpadinthmar - துரியோதனாதிகள் நூற்று வரும்
தாள் சாய,Thaal saaya - காலற்றுப் போம்படியாக
புக்க,Pukka - சேனையிடையே புகுந்த
நல் தேர் தனி பாகா,Nal ther thani paakaa - சிறந்த அத்விதீயனான ஸாரதியானவனே!
வாராய்,Vaarai - (அவ்வழகோடே) வருகின்றிலை,
பொருத்தம் இதுவோ,Poruththam idhuvo - அடியார் பக்கலில் பொருத்த மிருந்தபடி இதுவோ?