| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3498 | திருவாய்மொழி || (8-5–மாயக் கூத்தா) (எம்பெருமானது வடிவழகைக் காணப்பெறாத ஆழ்வார் ஆசை மிகுந்து அழுது அரற்றுதல்) (பிரானே! போலிகண்டு வருந்துமவனாய் நானிருக்க, ஆச்ரிதபக்ஷபாதியான நீ வந்து தோன்றுகின்றிலையே, இது உன் ஸ்வபாவத்திற்குச் சேருமோ? என்கிறார்.) 8 | ஒக்கும் அம்மான் உருவம் என்று உள்ளம் குழைந்து நாணாளும் தொக்கமே கப்பல் குழாங்கள் காணும் தோறும் தொலைவன் நான் தக்க வைவர் தமக்காயன்று ஈரைம்பதின்மர் தாள் சாய புக்க நல் தேர்ப் தனிப் பாகா வாராயிதுவோ பொருத்தமே–8-5-8 | தொக்க மேகம் பல் குழாங்கள் காணும் தோறும்,Thokka meagam pal kuzhaangal kaanum thorum - திரண்ட மேகங்களின் பல திரள்களைக் காணகிற போதெல்லாம் அம்மான் உருவம் ஒக்கும் என்று,Ammaan uruvam okkum endru - எம்பெருமானுடைய வடிவழகுக்குப் பொலியாயிருக்குமென்று உள்ளம் குழைந்து,Ullam kuzhaindhu - நெஞ்சுருகி நாள் நாளும் நான் தொலைவன்,Naal naalum naan tholaiyan - நாடோறும் நான் கிலேசப்படுவேன் அன்று,Andru - பாரதப்போர் நடந்த வக்காலத்தில் தக்க ஐவர் தமக்கு ஆய்,Thakka aivar thamakku aay - உன்னுறவுக்குத தகுதியான பஞ்ச பாண்டவர்களுக்காக ஈர் ஐம்பதின்மர்,Eer aimpadinthmar - துரியோதனாதிகள் நூற்று வரும் தாள் சாய,Thaal saaya - காலற்றுப் போம்படியாக புக்க,Pukka - சேனையிடையே புகுந்த நல் தேர் தனி பாகா,Nal ther thani paakaa - சிறந்த அத்விதீயனான ஸாரதியானவனே! வாராய்,Vaarai - (அவ்வழகோடே) வருகின்றிலை, பொருத்தம் இதுவோ,Poruththam idhuvo - அடியார் பக்கலில் பொருத்த மிருந்தபடி இதுவோ? |