| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3499 | திருவாய்மொழி || (8-5–மாயக் கூத்தா) (எம்பெருமானது வடிவழகைக் காணப்பெறாத ஆழ்வார் ஆசை மிகுந்து அழுது அரற்றுதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –இருந்ததே குடியாக எல்லாருடைய ஆர்த்திகளையும் போக்கி ரக்ஷித்து அருளுகைக்காக ஸ்ரீ மதுரையிலே வந்து திரு அவதாரம் பண்ணி அருளின ஆச்சர்ய குண கணான கிருஷ்ணன் -தன்னைக் காண ஆசைப்பட்டு நோவு படுகிற எனக்கு என் செய்து அருள நினைக்கிறானோ என்கிறார்.) 9 | இதுவோ பொருத்தம் மின்னாழிப் படையாய் ஏறு மிருஞ் சிறைப்புள் அதுவே கொடியா வுயர்த்தானே என்று என்று ஏங்கி யழுதக்கால் எதுவேயாகக் கருதுங்கொல் இம்மா ஞாலம் பொறை தீர்ப்பான் மதுவார் சோலை உத்தர மதுரைப் பிறந்த மாயனே–8-5-9 | மின் ஆழி படை யாய்,Min aazhi padai yaai - ஒளி பொருந்திய திருவாழியைப் படையாக வுடையவனே! ஏறும் இரு சிறைபுள் அதுவே கொடி ஆ உயர்த்தானே,Eerum iru sirai pul adhudhe kodi aa uyarththaaney - வாஹனமானவனும் பெரிய சிறகையுடையவனுமான பெரிய திருவடியையே கொடியாக எடுத்தவனே! இதுவோ பொருத்தம் என்று என்று,Idhuvo poruththam endru endru - இப்படி உபேக்ஷிப்பதோ பொருத்தம் என்று பல காலுஞ் சொல்லி ஏங்கி அழுதக்கால்,Aangi azhudhak kaalam - பொருமியழுதால், இ மா ஞாலம் பொறை தீர்ப்பான்,E maa nyaalam porai theerppaan - இப்பெரிய நிலவுலகின் பாரத்தைப் போக்குகைக்காக மது வார் சோலை உத்தா மதுரை பிறந்த மாயன்,Madhu vaar solai utthaa madurai pirandha maayan - தேன் வெள்ளமிடாநின்ற சோலைகளையுடைய வடமதுரையிலே பிறந்த மாயப் பெருமான் எதுவே ஆக கருதும் கொல்,Ethuve aaga karudhum kol - என்ன திருவுள்ளம்பற்றி யிருக்கிறபடியோ? |