திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3499 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3499திருவாய்மொழி || (8-5–மாயக் கூத்தா) (எம்பெருமானது வடிவழகைக் காணப்பெறாத ஆழ்வார் ஆசை மிகுந்து அழுது அரற்றுதல்) (ஸ்ரீ ஒன்பதினாயிரப்படி –இருந்ததே குடியாக எல்லாருடைய ஆர்த்திகளையும் போக்கி ரக்ஷித்து அருளுகைக்காக ஸ்ரீ மதுரையிலே வந்து திரு அவதாரம் பண்ணி அருளின ஆச்சர்ய குண கணான கிருஷ்ணன் -தன்னைக் காண ஆசைப்பட்டு நோவு படுகிற எனக்கு என் செய்து அருள நினைக்கிறானோ என்கிறார்.) 9
இதுவோ பொருத்தம் மின்னாழிப் படையாய் ஏறு மிருஞ் சிறைப்புள் அதுவே கொடியா வுயர்த்தானே என்று என்று ஏங்கி யழுதக்கால் எதுவேயாகக் கருதுங்கொல் இம்மா ஞாலம் பொறை தீர்ப்பான் மதுவார் சோலை உத்தர மதுரைப் பிறந்த மாயனே–8-5-9
பதவுரை Show / Hide
மின் ஆழி படை யாய்,Min aazhi padai yaai - ஒளி பொருந்திய திருவாழியைப் படையாக வுடையவனே!
ஏறும் இரு சிறைபுள் அதுவே கொடி ஆ உயர்த்தானே,Eerum iru sirai pul adhudhe kodi aa uyarththaaney - வாஹனமானவனும் பெரிய சிறகையுடையவனுமான பெரிய திருவடியையே கொடியாக எடுத்தவனே!
இதுவோ பொருத்தம் என்று என்று,Idhuvo poruththam endru endru - இப்படி உபேக்ஷிப்பதோ பொருத்தம் என்று பல காலுஞ் சொல்லி
ஏங்கி அழுதக்கால்,Aangi azhudhak kaalam - பொருமியழுதால்,
இ மா ஞாலம் பொறை தீர்ப்பான்,E maa nyaalam porai theerppaan - இப்பெரிய நிலவுலகின் பாரத்தைப் போக்குகைக்காக
மது வார் சோலை உத்தா மதுரை பிறந்த மாயன்,Madhu vaar solai utthaa madurai pirandha maayan - தேன் வெள்ளமிடாநின்ற சோலைகளையுடைய வடமதுரையிலே பிறந்த மாயப் பெருமான்
எதுவே ஆக கருதும் கொல்,Ethuve aaga karudhum kol - என்ன திருவுள்ளம்பற்றி யிருக்கிறபடியோ?