திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 3501 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3501திருவாய்மொழி || (8-5–மாயக் கூத்தா) (எம்பெருமானது வடிவழகைக் காணப்பெறாத ஆழ்வார் ஆசை மிகுந்து அழுது அரற்றுதல்) (இத்திருவாய்மொழிவல்லார் தாம்பட்ட துக்கம்படாதே இவ்வுலகிலே இப்பிறப்பிலே எம்பெருமானைப் பெற்று நிரந்தரமாக இன்புறுவரென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11
எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை யான் என்று என்று அங்கே தாழ்ந்த சொற்களால் அந்தண் குருகூர்ச் சடகோபன் செங்கேழ் சொன்ன வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள் இங்கே காண விப் பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே–8-5-11
பதவுரை Show / Hide
ஈன் துழாய் அம்மான் தன்னை,Een thuzhaai ammaan thannai - பரமபோக்யமான திருத்துழாய் மாலையையுடைய ஸர்வேச்வரனை
யான் எங்கே காண்கேன் என்று என்று,Yaan engge kaankaein endru endru - நான் எங்கே காணக் கடவேனென்று பலகாலுஞ் சொல்லி
அங்கே தாழ்ந்த சொற்களால்,Angge thaalndha sorngalaal - அவ்விஷயத்திலேயே ப்ரவணமான சொற்களினாலே
அம் தண் குருகூர் சடகோபன்,Am than kurukoor sadagopan - ஆழ்வார்
செம் கேழ் சொன்ன ஆயிரத்துள்,Sem kaezh sonna aayiraththul - மிகவும் செவ்விதாகச சொன்ன ஆயிரத்திலுள்ளே
இவையும் பத்தும் வல்லார்கள்,Ivaiyum paththum vallargal - இவை பத்தையும் ஓத வல்லவர்கள்
இங்கே காண,Ingae kaana - இந்நிலத்தே எல்லாரும் காணும்படி
இப்பிறப்பே, EpPirappe - இந்த ஜன்மத்திலேயே
எல்லியும் காலை மகிழ்வர்,Elliyum kaalai magizhvar - இரவும் பகலும் இடைவீடின்றி மகிழ்ந்திருக்கப் பெறுவர்கள்.