| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 3501 | திருவாய்மொழி || (8-5–மாயக் கூத்தா) (எம்பெருமானது வடிவழகைக் காணப்பெறாத ஆழ்வார் ஆசை மிகுந்து அழுது அரற்றுதல்) (இத்திருவாய்மொழிவல்லார் தாம்பட்ட துக்கம்படாதே இவ்வுலகிலே இப்பிறப்பிலே எம்பெருமானைப் பெற்று நிரந்தரமாக இன்புறுவரென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.) 11 | எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை யான் என்று என்று அங்கே தாழ்ந்த சொற்களால் அந்தண் குருகூர்ச் சடகோபன் செங்கேழ் சொன்ன வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள் இங்கே காண விப் பிறப்பே மகிழ்வர் எல்லியும் காலையே–8-5-11 | ஈன் துழாய் அம்மான் தன்னை,Een thuzhaai ammaan thannai - பரமபோக்யமான திருத்துழாய் மாலையையுடைய ஸர்வேச்வரனை யான் எங்கே காண்கேன் என்று என்று,Yaan engge kaankaein endru endru - நான் எங்கே காணக் கடவேனென்று பலகாலுஞ் சொல்லி அங்கே தாழ்ந்த சொற்களால்,Angge thaalndha sorngalaal - அவ்விஷயத்திலேயே ப்ரவணமான சொற்களினாலே அம் தண் குருகூர் சடகோபன்,Am than kurukoor sadagopan - ஆழ்வார் செம் கேழ் சொன்ன ஆயிரத்துள்,Sem kaezh sonna aayiraththul - மிகவும் செவ்விதாகச சொன்ன ஆயிரத்திலுள்ளே இவையும் பத்தும் வல்லார்கள்,Ivaiyum paththum vallargal - இவை பத்தையும் ஓத வல்லவர்கள் இங்கே காண,Ingae kaana - இந்நிலத்தே எல்லாரும் காணும்படி இப்பிறப்பே, EpPirappe - இந்த ஜன்மத்திலேயே எல்லியும் காலை மகிழ்வர்,Elliyum kaalai magizhvar - இரவும் பகலும் இடைவீடின்றி மகிழ்ந்திருக்கப் பெறுவர்கள். |