Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 3502 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
3502திருவாய்மொழி || (8-6–எல்லியும் காலையும்) (ஆழ்வாரது துன்பத்தைத் தீர்க்கும் பொருட்டு திருமால் திருக்கடித்தானத்தில் இருந்தமை கூறல் (திருக்கடித்தானம்)) (என்னுடைய ஆர்த்தியைத் தீர்த்தருள்பவன் ஸர்வேச்வரன், அவனூர் திருக்கடித்தானம் என்கிறார்.) 1
எல்லியும் காலையும் தன்னை நினைத்து எழ
நல்ல வருள்கள் நமக்கே தந்தருள் செய்வான்
அல்லி யந்தண்ணந்துழாய் முடி அப்பனூர்
செல்வர்கள் வாழும் திருக்கடித் தானமே–8-6-1
எல்லியும் காலையும் தன்னை நினைத்து எழ,Elliyum kaalaiyum thannai ninaiththu ezha - இரவும் பகலும் உபசாரகனான தன்னையே நினைத்து உஜ்ஜீவிக்கும்படியாக
நல்ல அருள்கள்,Nalla arulgkal - பரம க்ருபைகளை
நமக்கே தந்து,Namakke thandhu - நமக்கே அஸாதாரணமாகச் செய்து
அருள் செய்வான்,Arul seivaan - அனுக்கிரஹம் செய்வானாய்
அல்லி அம் தண் அம் துழாய் முடி,Alli am than am thuzhaai mudi - பூந்தாரையுடைத்தாய் அழகிய குளிர்ந்த திருத்துழாயணிந்த திருமுடியை யுடையனான
அப்பன்,Appan - எம்பெருமானுடைய
ஊர்,Oor - திவ்ய தேசம் (எது வென்னில்)
செல்வர்கள் வாழும் திருக்கடித்தானம்,Selvargal vaazhum thirukkadiththaanam - பகவத் கைங்கர்ய ஸம்பந்தங்கள் வாழப்பெற்ற திருக்கடித்தானமாகும்.